Monday, 16 November 2020

மூடப்படவுள்ளதா யாழ் சர்வதேச விமான நிலையம்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின்  அடிப்படையில்  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாகக் மவ்விம சிங்கள  பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை)  இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் விமான ரிக்கெட் விலையை குறைக்காதது, பயணிகளின் பொதிகள் ( passenger luggage)  மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறிவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின்  அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை  முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு  உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 15 November 2020

வீட்டு வாசலில் படுத்தது குற்றமா? இப்படியும் ஒரு கொடூர கணவன் மனைவியா?

 வீட்டுவாசலில் வந்து தூங்கிய நாய் மீது அசிட் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ம்காராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியே இந்த கொடுமையான செயலைச் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள கசாராவைச் சேர்ந்த கயூம் கான் என்பவரும் அவரது மனைவியான ஆஃப்ரின் என்பவருமே இந்த செயலைப் புரிந்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் அங்குள்ள நாய் ஒன்று அவ்வபோது வந்து தூங்கி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் அந்த நாய் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த நாய் தெருவில் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட நபர் ஒருவர் நாயை மீட்டு நாசிக் நகரில் உள்ள விலங்குகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் நாயின் முன்னங்கால் இரண்டும் ஒரு காதும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பீட்டா விலங்கியல் ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கயூம் கான் மற்றும் அவரது மனைவி ஆஃப்ரின் மீது விலங்குகளுக்கான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இலங்கையில் இன்று தீவிரமான கொரோனா!



இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் மொத்தமாக 704 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்தத்தொகை 17,287 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும் சடுதியான அதிகரிப்புக்கள் நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லப்போகின்றது என மருத்துவ வட்டாரங்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



Saturday, 14 November 2020

தமிழ் பெண்ணின் கொடூரச் செயல்; மொத்த குடும்பமும் காலி!

 தமிழ் பெண்ணொருவர் தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரைச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் தமிழகத்தின் சென்னை சௌகார்பேட்டையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்த 74 வயதாகும் தலித்சந்த் என்பவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர்.

மகன் ஷீத்தல், ஜெயமலா என்ற பெண்ணை திருமணம் செய்ததுடன் தற்போது பிரிந்து வாழ்வதால் ஜெயமலா புனேவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பல காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயமாலா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார். இதனால் இது வாக்குவாதமாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தன்னுடைய மாமனாரிடம், ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு திருமணம் பண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதன் காரணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டி, தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.

துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது. இருப்பினும், அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பவம் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அங்கு வந்த பொலிஸார் ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Friday, 13 November 2020

நடுக் கடலில் நடந்த சோகம்! நீரில் மிதந்த உயிர்கள்!

 ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியா கடல் பகுதியில் நேற்று (12) வியாழக்கிழமை மூழ்கியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் குறைந்தது 74 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாகவும், கடலில் மூழ்கிய 47 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது.

இந்த வழியில் கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 900 பேர் இந்த ஆண்டு இது வரை உயிரிழந்துள்ளனர் எனவும் ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 11,000 பேர் கைது செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், துஸ்பிரயோகங்களையும் எதிர்கொண்டு வருவதாக ஐ.ஓ.எம். கூறியுள்ளது.

புதன்கிழமை இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள லிபிய கடலோர நகரமான சப்ரதாவில் அகதிகள் படகொன்று கவிழ்ந்து ஐந்து பேர் இறந்தனர். அதிலிருந்த 100 பேர் மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆபிரிக்க கரையிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் செனகல் கடல் பிராந்தியத்தில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Wednesday, 11 November 2020

கொழும்பு பற்றி கசிந்த அதிர்ச்சி தகவல்! பல்லாயிரம் எண்ணிக்கையிலா?

 கொழும்பில் சுமார் முப்பதாயிரம் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்று வைத்தியர் ஒருவர் தகவலை கசியவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரியான விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுளதாகவும் இவர்களில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிபடையில் பார்த்தால் கொழும்பில் ஏராளமான நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் அடுத்தடுத்து மரணம்! என்ன நடக்கிறது நாட்டில்? கடும் கலக்கத்தில் மக்கள்!!

 இலங்கையில் சற்றுமுன் 46 ஆவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா – இம்புலுகொட பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை மேல்மாகாணத்தில் மீண்டும் ஒரு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்வதோ அல்லது வெளி மாகாணங்களிலிருந்து மேல்மாகாணத்துக்குச் செல்வதோ முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்மாகாணம் சம்மந்தப்பட்ட ரயில்சேவை மற்றும் பேருந்துச் சேவை என்பனவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Tuesday, 10 November 2020

குறுக்கே வந்த கறுத்த உருவம்; அலறியடித்து மோதிய நபர்!

 வீதியால் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இருட்டில் யானையிடம் அகப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக பிரதேச மக்களால் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் இன்று முன்னிரவு வேளையில் குறித்த நபர் வயல் வேலைகளை முடித்துக்கொண்டு சிறிய ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது ஒழுங்கையின் திருப்பத்தில் சடுதியாக கறுத்த உருவம் ஒன்று அசைந்து சென்றுகொண்டிருந்தது. குறித்த உருவம் ஒரு தனி யானை என்பதை உணர்ந்துகொண்ட குறித்த நபர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த யானையின் பின்புறமாக மோதியுள்ளார்.

ஆனாலும் சடுதியாக சுதாரித்த குறித்த நபர் யானையின் பிடியில் சிக்கிக்கொள்ளாது லாவகமாக தப்பியுள்ளார். சற்று தாமதித்திருந்தால்கூட குறித்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அவர் பரபரப்போடு கூறியுள்ளார்.

you may like this




Monday, 9 November 2020

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

கம்பஹா டொரன்கொடவில் வசிக்கும் பெண்ணெருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

63 வயதான இந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். என கம்பாஹா சுகாதார பொது சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.


கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையில் பரிசோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் இப்படியும் ஒரு பாம்பா? பெரும் வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!!



இலங்கையில் இரண்டு இனங்களைச் சேர்ந்த அரியவகை பாம்புகள் கண்டுபிடிக்கப்படுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பாம்பு

அதுதொடர்பான மேலதிக தகவல்களைத் தருகின்றது இந்தக் காணொளி


இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய பிடன்! காரணம் இதுதானாம்!!