கோழிக்குஞ்சு முட்டையை நோக்கி...!

விடை தேடும் விழிகள்கொண்டு
நடைப்பிணமானேன்-தெய்வமே
தடைவந்தபோதும் தாங்கிய நெஞ்சமிது
தாயவள் கருவினிலே
நீயோர் கொடி நானோர்கொடி
பூவுலகை அடைந்தபின்
வெண்ணிறச்சுவர் எமைத்தடுத்தது.
நீயங்கே நானிங்கே!
ஓ....!! சோதரமே சோதரமே
உன் உடன்பிறப்பழைக்கின்றேன்
பதிலது தாராயோ சோதரமே!!
By:V.Shan