உர்ர்....... என்ற சத்தம்கேட்டு நிமிர்ந்த
சீனு பாலத்தின் அணைச்சுவரில்
அமர்ந்திருந்த தன்னை கடந்த டிப்பர்
வாகனச்சில்களை வெறித்து நோக்கினான்.
வீதியின் அக்கரையிலிருந்த
ு இக்கரைவந்த சிறிய ஓணான் சிற்களுள்
நசியுண்டு தாரோடு தாரானது. மனதின்
வெறுமையால் ஓணானின்
சாவு இவனை ஒன்றும்
பண்ணவில்லை. மீண்டும்
தலைகுனிந்து கைகளை மிண்டுகொடுத்தான
். சிந்தனை சிக்கித்தவிக்க
சிறுதுளி கண்ணீர் பாதத்தின்
பெருவிரலில் பட்டுத்தெறித்தது.
"சீனு எழும்படா, மணி பத்துக்குமேல
ஆகுது. நான் விதானையாரிட்ட
போட்டுவாறன். வீட்டையே இரு!
ஊர்மேயப்போகாதே." என
மூச்சுவிடாமல் பேசிய
தங்கம்மா ஏதோ பையை எடுத்தவளாய்
"போட்டுவாறேண்டா சீனு"
என்றவாறே வெளிக்கிளம்பினாள்.
சீனுவின் அப்பா தலைநகரில் பிரபல
தனியார் கம்பனியொன்றில் கணக்காளராக
பணியாற்றி வருகிறார். மாதம்
ஒருதடவையாவது வீடுவந்து செல்வார்.
அப்போதெல்லாம் "சீனு ஊர்சுத்தாமல்
ஒழுங்கா வீட்டில இருக்கிறானா" என்ற
வினாவை தங்கம்மாவிடம் கேட்க
மறக்கார்.
பல்துலக்கியபடிய
ே குளியலறை பைப்பைத்திறந்தவன்
ஏதேச்சையாக அறையின்
மேற்சந்து வழியாக
பக்கத்துவீட்டு முற்றத்தை எட்டி நோக்கினான்.
அங்கே இருபத்தியாறு வயது மதிக்கத்தக்க
இளம்பெண்ணொருத்தி மிளகாய்
காயவிட்டுக்கொண்டிருந்தாள்.
குனிந்திருந்தமையால்
அவளது மார்புகள் அப்பட்டமாக
சீனுவின்பக்கம் தெரிந்தன. ஒருகணம்
ஸ்தம்பித்த சீனு பார்வையை தானிருந்த
அறையினுள்ளே திருப்பினான். "ம்ம்
யாராயிருக்கும்?"
ஒருவாறாக
குளித்துமுடிந்த
ு அம்மா தயார்செய்துவைத்த
உணவை உண்டபின் வெளியே வந்தான்.
அம்மா படலையைத்திறந்து
கொண்டு முற்றத்தில்
வந்து கொண்டிருந்தாள்.
"யாரம்மா துரை அங்கிள்வீட்ட
புதுசா வந்திருக்கிற பெட்டை?"
"ஓ அதுவா? அதுதான் அவரின்ர
இரண்டாவது மருமகள் சீலாவாம்"
"ஓ அந்த கண்டிப்பெட்டையா?"
"ம்ம் நீ சாப்பிட்டுவிட்டாயா?"
"ம்ம் நானொருக்கா தினேஷ் வீட்ட
போட்டுவாறனம்மா"
என்றவாறு ஊந்துருளியை சீண்டியவாறே பறந்தான்.
இரண்டு நாட்களின்பின்
சீலா சீனுவீட்டுக்கு சாதாரணமாகவே வந்துபோவாள்.
கணவன் வெளிநாடு சென்றபின்
மாமனாரும் மாமியாரும் தானும் என்ற
வெறுமையால் தங்கம்மாவிடம்
பொழுதுபோக்கிற்காக வந்து செல்வாள்.
அப்போதெல்லாம் சீனுவையே கண்களால்
தேடுவாள். காரணம்
தன்முன்னே தலைகுனிந்துசெல்லும்
முதல் ஆடவனாக
சீனுவையே கருதினாள்.
ஒருநாள் விறகுக்குள் இருந்த
புடையன்பாம்பு அவளது கையில்
தீண்டிவிடவே சீனுதான் உடனடியாக
வைத்தியசாலை கொண்டுசென்றான்.
இருவரதும் அண்மைய நெருக்கம்
இருவர்மனதிலும் வித்தியாசமான
அலைகளைத்தோற்றுவித்தன.
கணவனைப்பிரிந்திருந்த
சீலாவுக்கு தனிமையும் இளமையும்
தணலை மூட்டின.
சீலாவை முதன்முதலில் பார்த்த
நிலையை மனதிலிருந்து தூக்கியெறிய
படாதபாடுபட்டும் சீனுவால்
முடியவில்லை. அரும்பிய முல்லையும்
குறிஞ்சியும் முறைமையில்
திரிந்து தம்மியல்பு கெட்டு பாலையாகின.
ஆம் சீலாவும் சீனுவும் மிகமிக
நெருக்கமானார்கள். தம் அந்தரங்க
விடயங்களை மனம்விட்டுப்பேசலாயினர்.
ஒருநாள்
தங்கம்மா வீட்டு உறுதி சம்பந்தமாக
கச்சேரிக்கு சென்றாள்.
சீனு வீட்டிலானான்.
அப்போது சீலா படலையடியில்
ஆண்டி ஆண்டி என்றவாறே வந்தாள்.
உள்ளே வந்ததும்
அம்மா இல்லை என்றான் சீனு.
திரும்பிப்போக முற்பட்டவளை கையால்
அணைத்துத்தடுத்தான்.
சற்றும் எதிர்பாராதவளாய்
"விடுங்கள் சீனு வீட்டில
மாமி இருக்காங்க" என
திமிறியவளை பலமான
பிடி விடமறுத்தது.
சுவரில் பல்லியொன்று நச்நச் என
கத்திற்று.
முற்றத்து ரோஜாமீது தேனியொன்று அமர்ந்தபடி தேனை நுகர்ந்தது.
சீனுவின் கீழே சிக்கியிருந்த
சீலாவுக்கு அந்த
முற்றத்துக்காட்சி தெளிவாகத்தெரிந்தது சாளரத்தினூடே.
"எழுந்திருங்க தம்பி! இருக்க
வேறு இடம் கிடைக்கலையா?"
குனிந்திருந்த
சீனுவை காவல்த்துறை உறுப்பினர்
தட்டியெழுப்பினார். துரத்தில் பூம் பூம்
என்ற சத்தம் கேட்டு எழுந்தானே தவிர
அவர்குரல்கேட்டெளவில்லை.
பாலத்தை விட்டு சற்றுத்தள்ளிவந்தவன்
தாயையும் தகப்பனையும்
நினைந்தான்; சீலாவை நினைந்தான்.
அழுகையும் இளிவரலும் கொண்டவனாக
இறந்த ஒணானைப்பார்த்தான்.
எறும்புகள் ஒப்பாரிவைப்பதாய்
கடைசிநேரத்திலாவது தன்
இனப்பண்பாட்டை அங்கே ஓணானிடத்தே கண்டான்.
எதிரேயிருந்த
தண்டவாளத்தை ஊடறுக்கும்
ஒற்றையடிப்பாதைவழியே ஓர்
பெண்ணை ஊந்துருளியில் ஏற்றிவந்த
இளைஞன் மறுபக்கத்தில்
தடுக்கப்பட்டான். கொழும்பிலிருந்த
ு ஒமந்தை நொக்கி மிக வேகமாக
தொடரூந்து ஒன்று வந்துகொண்டிருக்க
சீனு தயாரானான்.
சடசடசடசட பூம்
கடைசியாக அவன் கண்ட
காட்சி தன்னைநோக்கி ஓடிவந்த அந்த
காவல்த்துறை உறுப்பினரையே.
தங்கம்மாவின் தளிர் தண்டவாளத்தால்
கிள்ளியெறியப்பட்டது.
சடசடசடபூம்!
பறையடித்து சங்கூதியபடியே தாண்டிக்குளம்
தாண்டிங்சென்றது அந்த ராட்ஷச
அட்டை!
By:V.Shan