Tuesday, 17 November 2020

கொரோனாவால் சிலர் மரணம்! இன்றுமட்டும் இவ்வளவுபேரா?

 இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும்
398 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக தொற்றுக்குளானோர் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரித்தது.

மேலும், இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 404ஆக காணப்படுவதுடன் நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210 ஆக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment