Tuesday, 17 November 2020

ரிசாத்துக்கு கொரோனா ஆபத்து? வெளியான தகவல்!

 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் சார்பில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு தெரியப்படுத்தினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தனது சேவை பெறுநரான ரிஷாத் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள  9 ஆவது கூண்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றார்.

குறித்த தொற்றுக்குள்ளானவர், கந்தக்காடு கொவிட் 19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த  ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும்,   அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொன்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக் குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

எவ்வாறாயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாத் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment