Monday, 9 November 2020

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

பூமியை சிறிய கோள் ஒன்று தாக்கி அழிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்த நூற்றாண்டின் 2068 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமி மேற்பரப்பில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் இந்த சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போபிஸ் -99942 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அது 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுகோள் 400 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாசா இதை ஒரு ‘பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்’ என்று வகைப்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த 2012ல் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றுக்கள் மாயன் காலெண்டர்கள் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டிருந்தாலும், இந்த தகவலை விஞ்ஞானிகளும் ஆதரித்தனர். ஆனாலும் விஞ்ஞானம் தொடர்பான கணிப்புகளும் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

கடந்த 2004ம் ஆண்டில் டேவிட் ஜே. தோலென் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அதே சிறுகோள் சில வட்டங்களில் சற்று எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுபாரு தொலைநோக்கியின் உதவியுடன், 2029-க்குள் அந்த கோள் பூமியை தாக்கும் என்று வானியலாளர்கள் கூறினர்.

முன்னதாக, மோதலுக்கான வாய்ப்புகள் 2.7% நிகழ்தகவு என மதிப்பிடப்பட்டது. அவை 2029ல் பறக்கும்போது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு காட்சியாக இருக்கும் என்றும் அவற்றால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

நாசாவின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து அமெரிக்காவையும் கடக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால் 2017 தரவும் மற்ற அனைத்து காரணிகளும் 2068 ஆம் ஆண்டில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment