சீர்மேவு சித்திரைப்பெருமகளே!
தார் அணி தண்மனத்தாளே!!
இன்முக வதனியாய்
இளவேனிற்காலமதில்
ஏற்றிடுவாய் சுடர்பல!!
உன்காலத்திற் சற்றே புழுக்கந்தான்
ஆனாலும்
எம் மனங்கள் புழுங்கியதில்லை
மாமரத்துக் குயிலதன் கூவொலியும்
பூமரத்து மலர்களது பொன்மணமும்
பூவையர்தம் கொலுசொலியும்
புழகாங்கிதமளிக்குமே உன்காலமதில்!
எங்கள் தாய்நிலத்து வேலிகளில்
தத்துவெட்டிதேடும் செண்பகமாய்
வாய்வெலத்துத்தேடுகிறேன்
விடைகளுக்கே விடைகளை!!
தாயவளே!!
கட்டவிழ்த்த கால்நடைகள்
சொக்கித்திரி காலமம்மா சுதந்திரத்துடன்!
ஆயினும் அவை
கட்டாக்காலிகளல்ல கட்டு அவிழ்த்த
காலிகள்!
அவைகளின் கட்டுக்கள்
கயிறுவரை மட்டுமே!!
கட்டவிழ்க்கமுடியா பல கட்டுக்களை நர
(மனித)படை கொண்டிருக்கின்றதே!
இருந்தும் அவிழ்க்கமுடியா அவலம்...!
நாசியரிக்கும்
தூசிகளை நம்மாட்டுவண்டி கிளப்புவதில்லை
ஆனாலும் புழுதியுண்டே!
சிறுமாரிதெளிக்கையில்
நறுமணக்குமதுவும்.
சித்திரை வயல்களில்
சிட்டுக்குருவியொன்று ஏதேதோ பேசுது!
"விடுவிடுவிடு" என்ற அதன்
கத்தலோசை
ஏதோ எனக்கும் விளங்கத்தான்
செய்கிறது!
எனக்குத்தெரிந்தவரை அதன்
பாஷைப்படி
விடுவிடுவிடு வீண்யோசனையை விடு
விடுவிடுவிடு வீண்கவலைகளை விடு
விடுவிடுவிடு உனைச்சூழ்ந்த
கட்டுக்களை அவிழ்த்துவிடு
ஓ! மனமே!! மனிதமனமே!!!
விடுதலைபெற விரும்புகிறாயா?
அப்படியானால் சிலவற்றைவிடு!
குருவித்தமிழின்
விடுவிடுவிடு ஓசையதை
மறுபக்கமும் திருப்பிப்பார்ப்பாய்!
விடுவிடுவிடு கூட்டைவிடாதே பேட்டைவிடாதே குஞ்சைவிடாதே
விடுவிடுவிடு உன் சுற்றத்தைவிடாதே
!
இத்தனையும் எனக்கு கற்றுத்தந்த
சித்திரையாளின் சிட்டுக்குருவிய
ோ அளவிற்சிறிது!!
உறவே! ஊனினை உருக்கிய உற்ற
உறவே!!
இதுகாறும் பலமீட்டல்களை
எமது சித்திரையாள் கொண்டதுவை
நினைந்தியோ எப்போது?
இளவேனிலாளே எங்கள் தாயே!
விடிந்திடும் வியாழனதில்
விடுதலைபல தந்திடம்மா
நித்திரை மறந்து
சித்திரைவரவுபார்
எத்துணை உறவுகளாம்
உலகத்தமிழுறவுகளே!
தகையதோர்
சகோதரமொழியுறவுகளே!!
வாழ்த்துகிறேன் வாயார!
வாழ்ந்திடுவீர் வளமுடனே!!
by:S.V.SHAN
(நான் கிறுக்கியவை)