அம்மாடி இதுதான் காதலா(சிறுகதை)

உள்ளாடைகளை அணிந்துகொண்டே டீ
சேர்ட்டை தேடிய சாராவுக்கு அந்த
கத்தி கண்ணில்பட்டது.
ஏதோ நினைத்தவளாய் உடுத்தாகியபின்
அதையும் எடுத்துக்கொண்டு
பரனை வரச்சொன்ன
இடத்திற்கு நேரத்திற்கு முன்பே வந்துவிட்டாள்.
"என்னை கைகழுவப்பார்க்கும்
பரதேசி பரன் இன்றோடு ஒழிந்தான்" என
வாய்க்குள் முணுமுணுத்தபடிய
ே ஓங்கி வளர்ந்திருந்த அரசமரவேரில்
அமர்ந்தாள்.
சிறு நேரத்தின்பின் உயர்ரக கார்
ஒன்று அவளருகே சற்றுத்தொலைவில்
வந்து நின்றது. அதை அறிந்தவளாய்
எழுந்து கத்தியை பின்னே வைத்துக்கொண்டு பிற்கட்டுத்தோரண
ையில் நின்றாள்.
காரிலிருந்து குனிந்தபடியே பிற்கட்டுத்தோரண
ையில் மெதுவாக இறங்கினான் பரன்.
"ராஸ்கல் ஏமாற்ற
நினைப்பது பத்தாதெண்டு கொல்லவா பிளான்போட்டுவந்தாய்,
இரு உன்னை முதலில் சிவலோகம்
அனுப்புறேன்" என மனதில்
கறுவியவாறே உதட்டுப்புன்னகை
யுடன் பரனை நோக்கினாள்.
பாலை நிலத்துக்கொற்றவை கொஞ்சம்
கொஞ்சமாய் அவள்மனதில்
குடிகொள்ளலாயினாள்.
பரனும் அவ்விடத்தேயே நின்றான்.
"என்னை வரச்சொன்னாயாமே?
ஏதாவது பரிசு தரப்போகிறாயா?"
"ம்ம் என் கண்களைப்பார்த்த
ு நிரந்தரமான
எதையோ கேட்பீங்களே அதையே தரப்போறேன்"
"நிஜமாவா?"
"ஆமாம், நீங்க என்ன தரப்போறீங்க?" என
அலட்சியமாகக்கேட்டாள் சாரா.
"ம்ம் பெரிசா ஒரு பிளானும் இல்லை,
உன் தலைக்கு ஏற்றதே தரப்போகிறேன்"
"ஓ தலைவரை போட்டிங்களா?, ரொம்ப
அவசரம் போங்க"
"ஏன் அப்படிச்சொல்லுறா" என கேட்ட
பரனின் தலையில்
ஆலமரத்து உச்சக்கொப்பு காகமொன்று இலக்குத்தவறாமல்
எச்சம்போட்டது. நிலைதடுமாறியவன்
அருவருப்பால் கைகளைத்தூக்கினான்.
அப்போது...! அங்கே...!!
காட்சியை ரசித்த சாரா சிலையானாள்.
ஆயிரம் காகங்கள் தன்மேல்
எச்சம்போடுவதாக உணர்ந்தாள்.
அந்தமரமே குடைசாய்வதுபோலி
ருந்தது அவள் முன்கண்ட காட்சி. ஆம்
பரனின் ரோஜாப்பூவைத்தாங்கிய
வலதுகை உயரவும்
உள்ளாடை அணியாத
அவனது அடிவயிற்றை டீ சேர்ட்
அப்பட்டமாகக்காட்டியது. சுண்டினால்
ரத்தம்கண்டும்
அவனது வெள்ளைத்தோலில்; "சாரா-
பரன்" என
பொக்குளின்கீழே வளைத்து பச்சை குத்தப்பட்டிருந
்தது. "ஐயோடா உனக்காக
மறைத்துக்கொண்டுவந்த என் சிறிய
பரிசைக்காட்டிவிட்டேனே என
ரோஜாவை முத்தமிட்டவாறே காரின்
சாரதி ஆசனத்தின் கீழ்
கைவிட்டு மஞ்சள்நிற
துணியெடுத்து துடைத்தான்.
மேற்கே ஆதவன்
கடலை முத்தமிட்டவாறே அத்தமித்துக்கொண
்டிருந்தான்.
சிலையான சாராவுக்கு ஆலமர
உச்சியிலிருந்து ஆட்காட்டிப்பறவை
யொன்றின் பலமான அவலக்குரல்மட்டு
ம் தெளிவாகக்கேட்டது.
இரண்டு பருந்துகள் அதனைக்
கொத்திக்கொண்டிருந்தன. என்ன
நினைத்தாளோ உடனே பாவிகள் பாவிகள்
என அலறினாள்.
திடுக்கிட்ட பரன் "விடு சாரா அந்த
ஆள்க்காட்டி ஏதாச்சும்
தவறிழைத்திருக்கும். இதற்கு நாம
என்ன பண்ணுறது.
என்றவாறே "சரி உன்
பரிசைக்காட்டு பார்ப்போம்" என்றான்.
அடுத்தடுத்து தலையில்
சம்மட்டிகளால்
அடிப்பது போலிருந்தது அவளுக்கு.
இவ்வளவுதூரம்
நேசிப்பவனையா கொல்ல நினைத்தேன்
என நொந்துகொண்டாள்.
"பரன் தவறுசெய்தால் கட்டாயம்
தண்டனைதானா?"
"ம் ஆள்க்காட்டி என்ன அது நீ
என்றாலும் தண்டனை தண்டனையே"
என செல்லமாகக்கூறிக
்கொண்டே அவளை நோக்கி வந்தான்.
கைகள் பதைபதைக்க நடுங்கித்துடிது
டிக்க மெதுவாக
கத்தியை முன்கொணர்ந்தாள். சற்றும்
எதிர்பாராத பரன் அதிர்ச்சியில்
ஸ்தம்பித்தான்.
"ஆஅ.... அம்மா"
சிறுகுடலையும்
ஊடுருவி முள்ளந்தண்டில்
பதிந்தது கத்திமுனை.
சித்திரத்தேரொன்று குடைசாய்வதுபோல்
மண்ணை முத்தமிட்டாள் தலைவி.
"சாராராராராராராரா! என
ஆலமரமே அதிரும்படி கத்தினான் பரன்.
ஆள்க்காட்டியின் அவலக்குரல்
அடங்கியது. இரு பருந்துகளும்
பறந்தேபோயின. எச்சம்போட்ட காகம்
மட்டும்
தனது உறவுகளை கரைந்தழைத்து.
By:V.Shan