Sunday, 15 November 2020

வீட்டு வாசலில் படுத்தது குற்றமா? இப்படியும் ஒரு கொடூர கணவன் மனைவியா?

 வீட்டுவாசலில் வந்து தூங்கிய நாய் மீது அசிட் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ம்காராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியே இந்த கொடுமையான செயலைச் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள கசாராவைச் சேர்ந்த கயூம் கான் என்பவரும் அவரது மனைவியான ஆஃப்ரின் என்பவருமே இந்த செயலைப் புரிந்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் அங்குள்ள நாய் ஒன்று அவ்வபோது வந்து தூங்கி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் அந்த நாய் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த நாய் தெருவில் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட நபர் ஒருவர் நாயை மீட்டு நாசிக் நகரில் உள்ள விலங்குகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் நாயின் முன்னங்கால் இரண்டும் ஒரு காதும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பீட்டா விலங்கியல் ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கயூம் கான் மற்றும் அவரது மனைவி ஆஃப்ரின் மீது விலங்குகளுக்கான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment