காதலியே...!

உன்னைநான்
தேடித்தேடி என்னிடம் கண்டுகொண்டேன்
என்னைநான் தேடித்தேடி உன்னிடம்
கண்டுகொண்டேன்.
ஞாபகமில்லையோ கண்ணே!
பல பொன்மாலைகள் போனது!
மறக்கமுடியாத மாலை நேரங்களவை!
அதன்பின்வரும் அந்த இரவு நேரம்,
மகா கொடுமை.
பிரிவின் ஆரம்பமல்லவா!
அவளுடைய பெரியவிழிகளில்
திரண்டுநிற்கும் அந்தக் கண்ணீர்
"எப்போதடா என்னை அழைத்துச்செல்வா
ய்" என சொல்லாமற் கொல்லும்.
இப்பிரிவுக்
கொடுமைக்காகவே மறுபடியும்
அவளை காணக்கூடாதெனத் தோன்றும்.
முடியுமா??? மீண்டும் எப்போது போய்
என்னவளைக்காண்பே
னென்று மனசு தோன்றும்.
காதலிப்பவர்களுக்கு வெற்றி கல்யாணம்
மட்டுமல்ல. அதன்பின்வரும் பல
சோதனைகளை கவிதைகொண்டு வெல்லமுடியாது!
மனத்துணிவும், பிடித்தகை விடாத
உறுதியும், நேர்மையும்
கொண்டு கடைசிவரை வாழ்ந்துகாட்டின
ால்தான் நீங்கள்மட்டுமல்ல உங்களுடன்
சேர்ந்து காதலும் வாழும்.
வாலிப நெஞ்சங்களே!
காதலை வெல்லுங்கள், வானவில்லில்
ஊஞ்சல் கட்டுங்கள். நேற்றுப்போல்
இன்று இல்லை இன்றுபோல்
நாளை இல்லை!
By:V.Shan