surrealism
என்பது மிகை யதார்த்தவாதம்/அடிமன
வெளிப்பாட்டியம் என தமிழில்
கண்டறியப்பட்டுள்ளது. ஆள்மனதின்
கற்பனை,
கனவுகளை அப்படியே யதார்த்தத்துக்க
ு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.
இது கலை, சமூகம், உள்ளுணர்வும்
வெளிப்பாடும் எனும்
மூன்று நிலைகளில் முக்கியம்
பெறுகிறது. இவ்வாதத்தினுடைய
தந்தையாக புகழ்பெற்ற ஓவியரான
ஸ்பானியாவைச்சேர்ந்த சல்வடோர்
டாலி அவர்களாவார்.
"யார் இந்த டாலி?"
23ம் புலிகேசிபோன்ற மீசையை உடைய
இவர், உலகத்தின் இயக்கத்தை தன்
மீசைமூலமாக உணர்வதாகக்கூறினார்.
தனது ஓவியங்களின் உந்துசக்திகளாக
கனவுகளே விளங்கின, மக்கள் ஏன்
அதிகமாக கனவுகாண்பதில்லை
என்று அங்கலாய்த்தார். இந்த
வாதத்தை விளக்கும்
இவரது ஓவியங்கள் ஏராளம். அவற்றில்
சிறப்பாக அறியப்பட்ட "நீங்காத
நினைவு/நினைவின் நிலைப்பு (The
Persistence of memory) என்ற
ஓவியமே மேலுள்ளது. இவரது வாத
ஓவியர்களாக Rene magritte, Pierre
Roy, Paul Delvaux போன்றோரும்
அறியப்படுகின்றனர்.
மிகை யதார்த்தவாதம் என்பது ஓவியம்,
சிறுகதை, கவிதை, நாவல் என
கலைப்படைப்புகளுள்
புகுந்துகொண்டது. சமூகத்தில்
அடிநிலைச்சமூகத்தினது சிக்கல்
தன்மைகளையே இது பெரிதும்
சித்தரித்திருந்தது. குறிப்பாக தமிழின்
முதல் வட்டார நாவலான நாகம்மாள்
நாவல், புதுமைப்பித்தனின்
துன்பக்கேணி போன்ற
படைப்புக்களையும்,
ஈழத்துக்கவிஞரான சோலைக்கிளியின்
"குருட்டு வண்ணாத்தி மோதிய காலை"
எனும் கவிதையும் இந்த
வாதத்தை எடுத்தியம்புகின்றன.
இந்த வாதம் சமூகத்தைப் புறவயமாக
ஏற்றுக்கொண்டு சமூகத்தையே பிரதிபலிக்கின்றது.
இவ்வாதத்தை அடியொற்றி ஓர்
இயக்கமே இருந்துள்ளது. குறிப்பாக
1925இல்
இவர்களது புரட்சி நடந்துள்ளது.
ஆரம்பத்தில் அராஜக அழிப்புவாத
நிலையிலிருந்து 1920களின்பின்
சிலரால்
மார்க்ஸிசத்தை நோக்கி திருப்பப்பட்டது.
இவர்களால் 1929இல் வரையப்பட்ட
உலக வரைபடம் உண்மைக்குப்புறம
்பானதாய்
அமைந்ததோடு பலரது விமர்சனங்களையும்
சம்பாதித்துக்கொண்டது. குறிப்பாக
பிரித்தானியாவை அயர்லாந்தோடு ஒட்டிப்பார்கக்க
ூட முடியாத அளவுக்கு சுருக்கினர்.
அதாவது மேற்குலகின்
மேலாதிக்கத்தன்மையைக் கொடுத்த
அனைத்தையும்
விரைந்து அழித்தல்தான்
இவர்களது அவசியதேவையாக
இருந்தது. இவர்களால் பல
அதிர்ச்சிப்பிரகடனங்களும்
முன்வைக்கப்பட்டன. இவற்றை பிரபல
வரலாற்றாசிரியரும்
கலைவிமர்சகருமான ஜோன் க்லேர்
என்பவர் கடுமையாக
விமர்சித்திருந்தார். இது பின் சுபாவ
யதார்த்தவாதம், விமர்சன, சோசலிஷ
யதார்த்தவாதம், மாந்திரீக
யதார்த்தவாதம் என பரிணமித்துளது.
இவைபற்றி ஈழத்துப் பேரறிஞர்களான
பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.
சிவத்தம்பி போன்றோரும் இதன்
தன்மைகள்பற்றி ஆராய்ந்துள்ளனர்.
மிகை யதார்த்தவாதத்தை
யதார்த்தவாதத்தின் (Realism) அடுத்த
நிலையென வாதிடுவோரும் உளர். (Sur
+realism) எது எப்படியோ இந்த வாதம்
சமூகத்தை சார்ந்ததாகையால்
இது விசேடமாக
நுணுகிப்பார்க்கவேண்டிய ஒன்றாகும்.
By:V.Shan