இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இவர்களுக்கு கொரோனாவுடன் வேறு நோயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் வெலிகந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது. இது கொரோனா நோயுடன் அதிகரித்துள்ளது.
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா நோயுடன் நிமோனியா இருந்துள்ளது.
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் வீட்டில் இறந்தார். இவருக்கு கொரோனா நோயுடன் நீரிழிவு நோயும் இருந்துள்ளது. இதுவே மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டள்ளது.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment