இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் மொத்தமாக 704 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்தத்தொகை 17,287 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும் சடுதியான அதிகரிப்புக்கள் நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லப்போகின்றது என மருத்துவ வட்டாரங்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment