தமிழ் பெண்ணொருவர் தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரைச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் சென்னை சௌகார்பேட்டையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்த 74 வயதாகும் தலித்சந்த் என்பவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர்.
இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார். இதனால் இது வாக்குவாதமாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தன்னுடைய மாமனாரிடம், ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு திருமணம் பண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதன் காரணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டி, தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.
எவ்வாறாயினும் சம்பவம் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அங்கு வந்த பொலிஸார் ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment