சமீபத்திய சினிமாப் பேச்சுக்களில் அதிகம் அடிபடும் வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாக படக்குழுவிலுள்ளோர் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில்,10 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் வைத்து இந்த விபத்து இடம்பெற்ற்றது.
படமாக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சி ஒன்றில் வில்லர்களுடன் பாய்ந்து பாய்ந்து சண்டை பிடிக்கும்போதே இந்த விபத்து நிகழ்ந்து அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
எவ்வாறாயினும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகி விட்டது எனவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நடிகர் அஜித்குமாருக்கு ஏதும் பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 20 வயது இளைஞன் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வரும் செய்தியொன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானின் சியல்கொட் பகுதியைச் சேர்ந்த அட்னான் என்ற இளைஞனே ஏற்கனவே மூவரைத் திருமணம் செய்துவிட்டு தனக்கு நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி, அவருடைய 3 மனைவிகளும் கணவருக்காக இணைந்து பெண் தேடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் தனது 16 வயதில் முதல் திருமணம் செய்ததுடன் அத்தோடு நின்றுவிடாமல் சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த ஒரு வருடத்துக்குப் முன்னர் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது.
ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகிய மூன்று மனைவிகளின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய விரும்புவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூன்று மனைவியரையும் கட்டிக்காப்பாத்த ஒரு மாதம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், தனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மூன்று மனைவிகளும் தன்னுடன் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பதே என சிரிப்புடன் கூறியுள்ல அவர், தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து தன்னை மாறி மாறி கவனித்து வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இவர்களுக்கு கொரோனாவுடன் வேறு நோயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் வெலிகந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது. இது கொரோனா நோயுடன் அதிகரித்துள்ளது.
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா நோயுடன் நிமோனியா இருந்துள்ளது.
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் வீட்டில் இறந்தார். இவருக்கு கொரோனா நோயுடன் நீரிழிவு நோயும் இருந்துள்ளது. இதுவே மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டள்ளது.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.
2) திரிகடுகம் கசாயம் :
30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
3) எலுமிச்சை :
ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4) தேங்காய் எண்ணெய் :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று.
5) துளசி :
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.
6) ஆடாதொடை :
ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.
7) கடுக்காய் :
மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும்.
இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும் 398 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் மொத்தமாக தொற்றுக்குளானோர் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரித்தது.
மேலும், இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 404ஆக காணப்படுவதுடன் நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210 ஆக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் சார்பில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு தெரியப்படுத்தினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், தனது சேவை பெறுநரான ரிஷாத் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள 9 ஆவது கூண்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றார்.
குறித்த தொற்றுக்குள்ளானவர், கந்தக்காடு கொவிட் 19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொன்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக் குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.
எவ்வாறாயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாத் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாகக் மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் விமான ரிக்கெட் விலையை குறைக்காதது, பயணிகளின் பொதிகள் ( passenger luggage) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறிவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவாசலில் வந்து தூங்கிய நாய் மீது அசிட் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ம்காராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியே இந்த கொடுமையான செயலைச் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள கசாராவைச் சேர்ந்த கயூம் கான் என்பவரும் அவரது மனைவியான ஆஃப்ரின் என்பவருமே இந்த செயலைப் புரிந்துள்ளனர்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் அங்குள்ள நாய் ஒன்று அவ்வபோது வந்து தூங்கி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் அந்த நாய் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த அந்த நாய் தெருவில் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட நபர் ஒருவர் நாயை மீட்டு நாசிக் நகரில் உள்ள விலங்குகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் நாயின் முன்னங்கால் இரண்டும் ஒரு காதும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பீட்டா விலங்கியல் ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கயூம் கான் மற்றும் அவரது மனைவி ஆஃப்ரின் மீது விலங்குகளுக்கான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் மொத்தமாக 704 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்தத்தொகை 17,287 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும் சடுதியான அதிகரிப்புக்கள் நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லப்போகின்றது என மருத்துவ வட்டாரங்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் பெண்ணொருவர் தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரைச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் சென்னை சௌகார்பேட்டையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்த 74 வயதாகும் தலித்சந்த் என்பவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர்.
மகன் ஷீத்தல், ஜெயமலா என்ற பெண்ணை திருமணம் செய்ததுடன் தற்போது பிரிந்து வாழ்வதால் ஜெயமலா புனேவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பல காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயமாலா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார். இதனால் இது வாக்குவாதமாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தன்னுடைய மாமனாரிடம், ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு திருமணம் பண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதன் காரணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டி, தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது. இருப்பினும், அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் சம்பவம் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அங்கு வந்த பொலிஸார் ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.