Friday, 13 November 2020

நடுக் கடலில் நடந்த சோகம்! நீரில் மிதந்த உயிர்கள்!

 ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியா கடல் பகுதியில் நேற்று (12) வியாழக்கிழமை மூழ்கியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் குறைந்தது 74 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாகவும், கடலில் மூழ்கிய 47 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது.

இந்த வழியில் கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 900 பேர் இந்த ஆண்டு இது வரை உயிரிழந்துள்ளனர் எனவும் ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 11,000 பேர் கைது செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், துஸ்பிரயோகங்களையும் எதிர்கொண்டு வருவதாக ஐ.ஓ.எம். கூறியுள்ளது.

புதன்கிழமை இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள லிபிய கடலோர நகரமான சப்ரதாவில் அகதிகள் படகொன்று கவிழ்ந்து ஐந்து பேர் இறந்தனர். அதிலிருந்த 100 பேர் மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆபிரிக்க கரையிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் செனகல் கடல் பிராந்தியத்தில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Wednesday, 11 November 2020

கொழும்பு பற்றி கசிந்த அதிர்ச்சி தகவல்! பல்லாயிரம் எண்ணிக்கையிலா?

 கொழும்பில் சுமார் முப்பதாயிரம் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்று வைத்தியர் ஒருவர் தகவலை கசியவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரியான விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுளதாகவும் இவர்களில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிபடையில் பார்த்தால் கொழும்பில் ஏராளமான நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் அடுத்தடுத்து மரணம்! என்ன நடக்கிறது நாட்டில்? கடும் கலக்கத்தில் மக்கள்!!

 இலங்கையில் சற்றுமுன் 46 ஆவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா – இம்புலுகொட பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை மேல்மாகாணத்தில் மீண்டும் ஒரு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்வதோ அல்லது வெளி மாகாணங்களிலிருந்து மேல்மாகாணத்துக்குச் செல்வதோ முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்மாகாணம் சம்மந்தப்பட்ட ரயில்சேவை மற்றும் பேருந்துச் சேவை என்பனவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Tuesday, 10 November 2020

குறுக்கே வந்த கறுத்த உருவம்; அலறியடித்து மோதிய நபர்!

 வீதியால் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இருட்டில் யானையிடம் அகப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக பிரதேச மக்களால் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் இன்று முன்னிரவு வேளையில் குறித்த நபர் வயல் வேலைகளை முடித்துக்கொண்டு சிறிய ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது ஒழுங்கையின் திருப்பத்தில் சடுதியாக கறுத்த உருவம் ஒன்று அசைந்து சென்றுகொண்டிருந்தது. குறித்த உருவம் ஒரு தனி யானை என்பதை உணர்ந்துகொண்ட குறித்த நபர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த யானையின் பின்புறமாக மோதியுள்ளார்.

ஆனாலும் சடுதியாக சுதாரித்த குறித்த நபர் யானையின் பிடியில் சிக்கிக்கொள்ளாது லாவகமாக தப்பியுள்ளார். சற்று தாமதித்திருந்தால்கூட குறித்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அவர் பரபரப்போடு கூறியுள்ளார்.

you may like this




Monday, 9 November 2020

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

கம்பஹா டொரன்கொடவில் வசிக்கும் பெண்ணெருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

63 வயதான இந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். என கம்பாஹா சுகாதார பொது சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.


கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையில் பரிசோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் இப்படியும் ஒரு பாம்பா? பெரும் வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!!



இலங்கையில் இரண்டு இனங்களைச் சேர்ந்த அரியவகை பாம்புகள் கண்டுபிடிக்கப்படுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பாம்பு

அதுதொடர்பான மேலதிக தகவல்களைத் தருகின்றது இந்தக் காணொளி


இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய பிடன்! காரணம் இதுதானாம்!!

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

பூமியை சிறிய கோள் ஒன்று தாக்கி அழிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்த நூற்றாண்டின் 2068 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமி மேற்பரப்பில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் இந்த சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போபிஸ் -99942 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அது 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுகோள் 400 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாசா இதை ஒரு ‘பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்’ என்று வகைப்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த 2012ல் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றுக்கள் மாயன் காலெண்டர்கள் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டிருந்தாலும், இந்த தகவலை விஞ்ஞானிகளும் ஆதரித்தனர். ஆனாலும் விஞ்ஞானம் தொடர்பான கணிப்புகளும் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

கடந்த 2004ம் ஆண்டில் டேவிட் ஜே. தோலென் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அதே சிறுகோள் சில வட்டங்களில் சற்று எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுபாரு தொலைநோக்கியின் உதவியுடன், 2029-க்குள் அந்த கோள் பூமியை தாக்கும் என்று வானியலாளர்கள் கூறினர்.

முன்னதாக, மோதலுக்கான வாய்ப்புகள் 2.7% நிகழ்தகவு என மதிப்பிடப்பட்டது. அவை 2029ல் பறக்கும்போது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு காட்சியாக இருக்கும் என்றும் அவற்றால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

நாசாவின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து அமெரிக்காவையும் கடக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால் 2017 தரவும் மற்ற அனைத்து காரணிகளும் 2068 ஆம் ஆண்டில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய பிடன்! காரணம் இதுதானாம்!!

 அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார்.

கறுப்பின சிறுமி ஒருத்தியிடம் ஜோ பிடன் மிகுந்த டக்கத்துடன் மன்னிப்புக் கோரிய சம்பவம் பலரையும் கவர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பிடன் மெற்படி மன்னிப்பு கேட்டதோடு மனிதநேயம் திரும்ப வேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த வெள்ளையின பொலிஸார் ஒருவர் குறித்த இளைஞரை கீழே தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அமுக்கி கொலை செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்ததோடு ட்ரம் அரசாங்கத்தின்மீதான பலத்த விமர்சனங்களையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

you may like this



செய்தியாளர்கள் நாடாளுமன்றுக்கு செல்ல தடை!

 நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடாளுமன்ற அமர்வு விவகாரங்கள் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஊடக பக்கங்களான இணையதளம், முகபுத்தம், மற்றும் YouTube என்பவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிக்க இணக்கம்! எங்கே தெரியுமா?


கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் உடலங்களை அடக்கம் செய்ய அரச உயர் மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பகுதியில் அடக்கம் செய்ய ஒரு இடமொன்றை தேர்ந்தெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. முடிந்தால் வேறு இடங்களையும் ஆலோசிக்கலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை எரித்தமை அவர்களது மத உரிமையை மீறி செயற்பட்டமை கடும் எதிர்ப்பையும் மனவருத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.