Saturday, 21 November 2020

யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் பயங்கர ஆபத்து!

 இலங்கையின் வடக்கு மாகாணத்தை தாக்கவல்ல மிகப்பெரிய புயல் சின்னமொன்று நாளை மறுதினம் அளவில் வங்காளவிரிகுடாவில் உருவெடுக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்மதித் தரவுகளை வைத்து கணிக்கும்போது குறித்த புயலின் பாதை வட மாகாணத்தின் முல்லைத்தீவை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் வடக்கு மக்கள் இடம்பெயரும் அளவுக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் பதிவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்ட ‘நிஷா’ புயல் போன்றே இதனுடைய இயல்பும் வழித்தடமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இரண்டு குழந்தைகளை விழுங்கிய குழி; யாழில் நடந்த கொடூரம்!


யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில் அயலர்களால் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) கொண்ட சகோதரர்களான இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தையார் பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல்பகுதியில் அயலர்கள் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்து சேறும் சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Thursday, 19 November 2020

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இளம் பெண்! கதறும் சொந்தங்கள்!!

இலங்கையில் நேற்றைய தினம் (19) கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பு 15 பகுதியைச் சேரந்த 27 வயது பெண் ஒருவர் பலியானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் கண்டறியப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றால் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையே மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார். கொழும்பு – 10 பகுதியில் வசிக்கும் 70 வயது நபரே உயிரிழந்தவராவார். இவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததுடன் இவருக்கு கொவிட் நோய்த்தொற்றுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டமை மரணத்துக்கு காரணமாகியுள்ளது.

இதேவேளை களுத்துறை பகுதியில் இரு மரணங்கள் பதிவாகின. குறித்த பகுதியில் வசிக்கும் 59 வயது பெண் தனது வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொவிட் நோயுடன் உயர் இரத்த அழுத்தமும் காணப்பட்டுள்லமை இறப்புக்கு காரணமாகியுள்ளது.

மற்றுமொருவர் களுத்துறை – ஹத்தோட்டாவைச் சேர்ந்தவர். 36 வயதான இந்த நபர் வீட்டில் இறந்ததாக கூறப்பட்டுள்ளதுடன் கொவிட் நோய்த்தொற்றால் மார்பில் ஏற்பட்ட நோய்த்தொற்று இவருக்கான மரணத்தின் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நான்கு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக மரணமடைந்தோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளது.


சூர்யா படத்தில் அப்துல் கலாமாக நடித்தவர் படம் பார்க்காமலே இறந்த சோகம்!

 சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், ‘உடுமலை கலாம்’ எனவும் அழைக்கப்பட்டவர்.

தாம் நடித்த படம் திரைக்கு வரும் முன்பாகவே மரணம் அவரைத் தழுவிக் கொண்டதால், அவருக்கு மிகவும் பிடித்தமான அப்துல் கலாம் தோற்றத்தில் தம்மை திரையில் பார்க்கும் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக கூறுகின்றனர்.

அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட ஷேக் மைதீன், கலாமின் அறிவுரைகளை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக தெரிவிக்கின்றனர் அவரது நண்பர்கள்.

“ஷேக் மைதீனை எனக்கு 13 வருடங்களாக தெரியும். ஏழ்மையான குடும்ப சூழலில் படிப்பறிவில்லாமல் வளர்ந்தவர் அவர். வாழ்வாதாரத்திற்காக பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போதிலிருந்தே அப்துல் கலாம் மீது பற்றுக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அப்துல் கலாமின் சாயலில் இருப்பார். 10 வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரைப் போலவே முடி அமைப்பை மாற்றிக் கொண்டு வந்து நின்றார். ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. அன்று முதல் அப்துல் கலாமைப் போலவே தனது தோற்றத்தை அமைத்துக் கொள்வதோடு, அவரது அறிவுறைகளையும் மாணவர்களிடம் பரப்பத் துவங்கினார்” என்கிறார் ஷேக் மைதீனின் நண்பர் லட்சுமணன்.

உடுமலைப்பேட்டையில் 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட தன்னார்வ குழுவில், ஷேக் மைதீனின் களப்பணி முக்கியமானது என கூறுகிறார் லட்சுமணன்.

“பசுமைப் புரட்சி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நற்பணி இயக்கம் என்ற தன்னார்வ குழுவை உருவாக்கி அதில் ஷேக் மைதீனை கெளரவத் தலைவராக நியமித்தோம். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார். அவரைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் வரும். அப்துல் கலாமைப் போலவே மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஷேக் மைதீனும் விருப்பப்படுவார். ‘படிப்பறிவு இல்லாததால் தான் நான் பெயிண்டிங் வேலைக்கு சென்றேன். அதனால், நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். கலாம் ஐயாவைப் போல் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்’ என எல்லா மேடைகளிலும் பேசுவார். ‘ஷேக் மைதீன் எனும் உடுமலை கலாம்’ என்று ஆரம்பத்தில் அவரை நாங்கள் அழைத்து வந்தோம். பின்னர், ‘உடுமலை கலாம்’ என்பதே அவரின் அடையாளமாக மாறிப்போனது” என்கிறார் லட்சுமணன்.

அப்துல் கலாமின் உருவ தோற்றம் இருப்பதால் போகும் இடமெல்லாம் ஷேக் மைதீனோடு செல்ஃபி எடுக்க மக்கள் கூட்டம் சேர்ந்துவிடும் என கூறுகிறார் அவரோடு சமூகப் பணிகளை மேற்கொண்ட அபு இக்பால்.

“பெரம்பலூரில் ஓர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஷேக் மைதீனுக்கு அழைப்பு வந்தது. நானும், அவரும் திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினோம். திடீரென அவரைச் சுற்றி பொதுமக்கள் கூடத் தொடங்கினர். பலரும் அவரோடு செல்ஃபி எடுக்க குவிந்துவிட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமானது. இருந்தும், அவர் அனைவரோடும் நின்று படம் எடுத்துக் கொண்டார். இதனால், பொது இடங்களுக்கு செல்கையில் தலைமுடியை மறைத்து துணியைக் கட்டிக்கொள்வார். பல சிரமங்கள் இருந்தாலும் மாணவர்களை சந்தித்து உரையாற்றுவதற்கு உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார். எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர் ஷேக் மைதீன்” என்கிறார் இவர்.

திருப்பூர், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வ குழுக்களோடு இணைந்து ஷேக் மைதீன் பணியாற்றியுள்ளார்.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் இவர் நடித்து பிரபலமடைந்துள்ளார். அதன் மூலமாகவே சூரரைப்போற்று திரைப்படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

“5 வருடங்களுக்கு முன்னர் அப்துல் கலாம் குறித்த ஆவணப்படத்திற்காக ஷேக் மைதீனை முதல்முறையாக சந்தித்து பேசினேன். கலாமின் அசல் உருவ தோற்றத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அந்த ஆவணப்படத்தை எடுக்க முடியவில்லை. அதற்கு பின்னர், கும்பகோனம் பள்ளி தீவிபத்து குறித்த குறும்படத்தில் அவரை நடிக்க வைத்தோம். அது அவருக்கும் எங்கள் குழுவிற்கும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து ஏராளமான குறும்படங்களில் அவர் நடித்தார். அதன் மூலம் பிரபலமானவர், சூரரைப்போற்று படத்திலும் அப்துல் கலாம் கதாப்பாத்திரத்திலேயே நடித்தார்” என்கிறார் சரவணன்.

“சில மாதங்களுக்கு முன் அவரை நான் நேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். அதில் மிகவும் உற்சாகமாக பல நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கையில், உடுமலைப்பேட்டை வந்துள்ளார். அப்துல் கலாம் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஷேக் மைதீனும் சென்றுள்ளார். அப்போது இவர் தான் அப்துல் கலாம் என நினைத்துக்கொண்ட போலீசார் பாதுகாப்பில்லாமல் ஜனாதிபதி நடந்து வருவதாக நினைத்துக் கொண்டு ஷேக் மைதீனை காரில் ஏற்றியுள்ளனர். பின்னர், தான் அப்துல்கலாம் இல்லை எனக் கூறியதும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்துகொண்ட அப்துல்கலாம், ஷேக் மைதீனை நேரில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ‘கிராமங்களுக்கு என்னால் வரமுடியவில்லை. எனவே, என்னைப் போலவே இருக்கும் நீ, கிராமங்களுக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் உரையாடு’ என வலியுறுத்தியதாக ஷேக் மைதீன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்” என அவருடனான நினைவுகளை கூர்கிறார் இயக்குனர் சரவணன்.

சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்த பின்னர், தன்னைப் பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என தனது குடும்பத்தினரிடம் ஷேக் மைதீன் தெரிவித்ததாக கூறுகிறார் அவரது மூத்த மகன் ஜெயிலானி.

“முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த பின்பு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கலாமின் வீட்டிற்கும் சென்று குடும்பத்தாரை எனது தந்தை சந்தித்துள்ளார். கலாம் ஐயாவைப் போன்ற உருவத் தோற்றம் இருந்ததால் அவரின் குடும்பத்தினரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இன்றும் அந்த தொடர்பு நீடிக்கிறது. பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக உடல் நலத்தை கவனிக்காமல் ஊரெல்லாம் சுற்றி வந்தார். இதனால், குடும்பத்தினர் அனைவரும் அவரிடம் கடிந்து கொள்வோம்.”

“சூரரைப்போற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்து வந்தது முதல் படம் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தார். இப்படத்தின் மூலம் தன்னை பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என அவர் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், படம் வெளியாகும் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப்போனது.”

“கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி, தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார். படத்தை பார்க்காமலே இறந்துவிட்டார் என்ற சங்கடத்தால் நான் அந்த படத்தை பார்க்கவில்லை. இம்மாதம் படம் வெளியானதும் பலர் என்னை அழைத்து பேசி பாராட்டுத் தெரிவித்தனர். சமீபத்தில் தான் குடும்பத்தோடு சென்று சூரரைப்போற்று படம் பார்த்தோம். அவர் வாழ்ந்த அப்துல் கலாம் கதாப்பரத்திலேயே நடித்து புகழ் பெற்றுவிட்டார். அவர் எதிர்பார்த்த பாராட்டுக்கள் கிடைக்கும்போது அதனை பெற்றுக்கொள்ள அவர் இல்லையே என்ற வருத்தம் தான் எங்களுக்கு” என தெரிவிக்கிறார் ஷேக் மைதீனின் மூத்த மகன் ஜெயிலானி.

சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமின் உருவ ஒற்றுமை கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளோடும் பயணித்த ‘உடுமலை கலாம்’ என்கின்ற ஷேக் மைதீன் அப்துல்கலாமாகவே திரையில் தோன்றி வரலாறாக மாறிவிட்டார் என பெருமை கொள்கின்றனர் ஷேக்மைதீனின் நண்பர்கள்.


அஜித்குமாருக்கு நேர்ந்த கதி? படப்பிடிப்பில் கடும் சண்டை; சோகத்தில் ரசிகர்கள்!

 சமீபத்திய சினிமாப் பேச்சுக்களில் அதிகம் அடிபடும் வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாக படக்குழுவிலுள்ளோர் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங்  நடைபெற்று வந்த நிலையில்,10 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் வைத்து இந்த விபத்து இடம்பெற்ற்றது.

படமாக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சி ஒன்றில் வில்லர்களுடன் பாய்ந்து பாய்ந்து சண்டை பிடிக்கும்போதே இந்த விபத்து நிகழ்ந்து அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து  படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகி விட்டது எனவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நடிகர் அஜித்குமாருக்கு ஏதும் பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.


Wednesday, 18 November 2020

20 வயதுக்குள் இத்தனை மனைவிகளா? நான்காவதுக்கும் குடும்பத்தோட ரெடி!

 மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 20 வயது இளைஞன் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வரும் செய்தியொன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் சியல்கொட் பகுதியைச் சேர்ந்த அட்னான் என்ற இளைஞனே ஏற்கனவே மூவரைத் திருமணம் செய்துவிட்டு தனக்கு நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி, அவருடைய 3 மனைவிகளும் கணவருக்காக இணைந்து பெண் தேடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தனது 16 வயதில் முதல் திருமணம் செய்ததுடன் அத்தோடு நின்றுவிடாமல் சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த ஒரு வருடத்துக்குப் முன்னர் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகிய மூன்று மனைவிகளின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய விரும்புவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்று மனைவியரையும் கட்டிக்காப்பாத்த ஒரு மாதம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், தனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மூன்று மனைவிகளும் தன்னுடன் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பதே என சிரிப்புடன் கூறியுள்ல அவர், தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து தன்னை மாறி மாறி கவனித்து வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.


Tuesday, 17 November 2020

இலங்கையில் இன்று இதனால்தான் ஐவர் இறந்தார்களாம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இவர்களுக்கு கொரோனாவுடன் வேறு நோயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் வெலிகந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.

கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது. இது கொரோனா நோயுடன் அதிகரித்துள்ளது.

கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா நோயுடன் நிமோனியா இருந்துள்ளது.

தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் வீட்டில் இறந்தார். இவருக்கு கொரோனா நோயுடன் நீரிழிவு நோயும் இருந்துள்ளது. இதுவே மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டள்ளது.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

நெஞ்சில் சளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புத மூலிகை!

 1) இஞ்சி :

10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.
2) திரிகடுகம் கசாயம் :
30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
3) எலுமிச்சை :
ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4) தேங்காய் எண்ணெய் :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று.
5) துளசி :
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.
6) ஆடாதொடை :
ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.
7) கடுக்காய் :
மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும்.

கொரோனாவால் சிலர் மரணம்! இன்றுமட்டும் இவ்வளவுபேரா?

 இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும்
398 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக தொற்றுக்குளானோர் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரித்தது.

மேலும், இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 404ஆக காணப்படுவதுடன் நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210 ஆக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ரிசாத்துக்கு கொரோனா ஆபத்து? வெளியான தகவல்!

 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் சார்பில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு தெரியப்படுத்தினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தனது சேவை பெறுநரான ரிஷாத் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள  9 ஆவது கூண்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றார்.

குறித்த தொற்றுக்குள்ளானவர், கந்தக்காடு கொவிட் 19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த  ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும்,   அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொன்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக் குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

எவ்வாறாயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாத் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Monday, 16 November 2020

மூடப்படவுள்ளதா யாழ் சர்வதேச விமான நிலையம்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின்  அடிப்படையில்  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாகக் மவ்விம சிங்கள  பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை)  இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் விமான ரிக்கெட் விலையை குறைக்காதது, பயணிகளின் பொதிகள் ( passenger luggage)  மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறிவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின்  அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை  முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு  உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 15 November 2020

வீட்டு வாசலில் படுத்தது குற்றமா? இப்படியும் ஒரு கொடூர கணவன் மனைவியா?

 வீட்டுவாசலில் வந்து தூங்கிய நாய் மீது அசிட் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ம்காராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியே இந்த கொடுமையான செயலைச் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள கசாராவைச் சேர்ந்த கயூம் கான் என்பவரும் அவரது மனைவியான ஆஃப்ரின் என்பவருமே இந்த செயலைப் புரிந்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் அங்குள்ள நாய் ஒன்று அவ்வபோது வந்து தூங்கி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் அந்த நாய் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த நாய் தெருவில் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட நபர் ஒருவர் நாயை மீட்டு நாசிக் நகரில் உள்ள விலங்குகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் நாயின் முன்னங்கால் இரண்டும் ஒரு காதும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பீட்டா விலங்கியல் ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கயூம் கான் மற்றும் அவரது மனைவி ஆஃப்ரின் மீது விலங்குகளுக்கான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இலங்கையில் இன்று தீவிரமான கொரோனா!



இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் மொத்தமாக 704 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்தத்தொகை 17,287 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும் சடுதியான அதிகரிப்புக்கள் நாட்டை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லப்போகின்றது என மருத்துவ வட்டாரங்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



Saturday, 14 November 2020

தமிழ் பெண்ணின் கொடூரச் செயல்; மொத்த குடும்பமும் காலி!

 தமிழ் பெண்ணொருவர் தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரைச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் தமிழகத்தின் சென்னை சௌகார்பேட்டையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்த 74 வயதாகும் தலித்சந்த் என்பவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர்.

மகன் ஷீத்தல், ஜெயமலா என்ற பெண்ணை திருமணம் செய்ததுடன் தற்போது பிரிந்து வாழ்வதால் ஜெயமலா புனேவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பல காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயமாலா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார். இதனால் இது வாக்குவாதமாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தன்னுடைய மாமனாரிடம், ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு திருமணம் பண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதன் காரணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டி, தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.

துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது. இருப்பினும், அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பவம் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அங்கு வந்த பொலிஸார் ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Friday, 13 November 2020

நடுக் கடலில் நடந்த சோகம்! நீரில் மிதந்த உயிர்கள்!

 ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியா கடல் பகுதியில் நேற்று (12) வியாழக்கிழமை மூழ்கியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் குறைந்தது 74 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாகவும், கடலில் மூழ்கிய 47 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது.

இந்த வழியில் கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 900 பேர் இந்த ஆண்டு இது வரை உயிரிழந்துள்ளனர் எனவும் ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 11,000 பேர் கைது செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், துஸ்பிரயோகங்களையும் எதிர்கொண்டு வருவதாக ஐ.ஓ.எம். கூறியுள்ளது.

புதன்கிழமை இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள லிபிய கடலோர நகரமான சப்ரதாவில் அகதிகள் படகொன்று கவிழ்ந்து ஐந்து பேர் இறந்தனர். அதிலிருந்த 100 பேர் மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆபிரிக்க கரையிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் செனகல் கடல் பிராந்தியத்தில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Wednesday, 11 November 2020

கொழும்பு பற்றி கசிந்த அதிர்ச்சி தகவல்! பல்லாயிரம் எண்ணிக்கையிலா?

 கொழும்பில் சுமார் முப்பதாயிரம் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்று வைத்தியர் ஒருவர் தகவலை கசியவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரியான விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுளதாகவும் இவர்களில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிபடையில் பார்த்தால் கொழும்பில் ஏராளமான நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் அடுத்தடுத்து மரணம்! என்ன நடக்கிறது நாட்டில்? கடும் கலக்கத்தில் மக்கள்!!

 இலங்கையில் சற்றுமுன் 46 ஆவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா – இம்புலுகொட பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை மேல்மாகாணத்தில் மீண்டும் ஒரு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்வதோ அல்லது வெளி மாகாணங்களிலிருந்து மேல்மாகாணத்துக்குச் செல்வதோ முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்மாகாணம் சம்மந்தப்பட்ட ரயில்சேவை மற்றும் பேருந்துச் சேவை என்பனவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Tuesday, 10 November 2020

குறுக்கே வந்த கறுத்த உருவம்; அலறியடித்து மோதிய நபர்!

 வீதியால் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இருட்டில் யானையிடம் அகப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக பிரதேச மக்களால் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் இன்று முன்னிரவு வேளையில் குறித்த நபர் வயல் வேலைகளை முடித்துக்கொண்டு சிறிய ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது ஒழுங்கையின் திருப்பத்தில் சடுதியாக கறுத்த உருவம் ஒன்று அசைந்து சென்றுகொண்டிருந்தது. குறித்த உருவம் ஒரு தனி யானை என்பதை உணர்ந்துகொண்ட குறித்த நபர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த யானையின் பின்புறமாக மோதியுள்ளார்.

ஆனாலும் சடுதியாக சுதாரித்த குறித்த நபர் யானையின் பிடியில் சிக்கிக்கொள்ளாது லாவகமாக தப்பியுள்ளார். சற்று தாமதித்திருந்தால்கூட குறித்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அவர் பரபரப்போடு கூறியுள்ளார்.

you may like this




Monday, 9 November 2020

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

கம்பஹா டொரன்கொடவில் வசிக்கும் பெண்ணெருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

63 வயதான இந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். என கம்பாஹா சுகாதார பொது சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.


கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையில் பரிசோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் இப்படியும் ஒரு பாம்பா? பெரும் வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!!



இலங்கையில் இரண்டு இனங்களைச் சேர்ந்த அரியவகை பாம்புகள் கண்டுபிடிக்கப்படுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பாம்பு

அதுதொடர்பான மேலதிக தகவல்களைத் தருகின்றது இந்தக் காணொளி


இவற்றையும் பாருங்கள்:

இலங்கையில் வீட்டிலேயே செத்து மடியும் மனிதர்கள்!

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய பிடன்! காரணம் இதுதானாம்!!

மனித குலம் அழியப்போகின்றது? பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் கிரகம்!

பூமியை சிறிய கோள் ஒன்று தாக்கி அழிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்த நூற்றாண்டின் 2068 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமி மேற்பரப்பில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் இந்த சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போபிஸ் -99942 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அது 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுகோள் 400 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாசா இதை ஒரு ‘பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்’ என்று வகைப்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த 2012ல் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றுக்கள் மாயன் காலெண்டர்கள் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டிருந்தாலும், இந்த தகவலை விஞ்ஞானிகளும் ஆதரித்தனர். ஆனாலும் விஞ்ஞானம் தொடர்பான கணிப்புகளும் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

கடந்த 2004ம் ஆண்டில் டேவிட் ஜே. தோலென் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அதே சிறுகோள் சில வட்டங்களில் சற்று எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுபாரு தொலைநோக்கியின் உதவியுடன், 2029-க்குள் அந்த கோள் பூமியை தாக்கும் என்று வானியலாளர்கள் கூறினர்.

முன்னதாக, மோதலுக்கான வாய்ப்புகள் 2.7% நிகழ்தகவு என மதிப்பிடப்பட்டது. அவை 2029ல் பறக்கும்போது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு காட்சியாக இருக்கும் என்றும் அவற்றால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

நாசாவின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து அமெரிக்காவையும் கடக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால் 2017 தரவும் மற்ற அனைத்து காரணிகளும் 2068 ஆம் ஆண்டில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய பிடன்! காரணம் இதுதானாம்!!

 அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார்.

கறுப்பின சிறுமி ஒருத்தியிடம் ஜோ பிடன் மிகுந்த டக்கத்துடன் மன்னிப்புக் கோரிய சம்பவம் பலரையும் கவர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பிடன் மெற்படி மன்னிப்பு கேட்டதோடு மனிதநேயம் திரும்ப வேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த வெள்ளையின பொலிஸார் ஒருவர் குறித்த இளைஞரை கீழே தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அமுக்கி கொலை செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்ததோடு ட்ரம் அரசாங்கத்தின்மீதான பலத்த விமர்சனங்களையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

you may like this



செய்தியாளர்கள் நாடாளுமன்றுக்கு செல்ல தடை!

 நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடாளுமன்ற அமர்வு விவகாரங்கள் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஊடக பக்கங்களான இணையதளம், முகபுத்தம், மற்றும் YouTube என்பவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிக்க இணக்கம்! எங்கே தெரியுமா?


கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் உடலங்களை அடக்கம் செய்ய அரச உயர் மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பகுதியில் அடக்கம் செய்ய ஒரு இடமொன்றை தேர்ந்தெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. முடிந்தால் வேறு இடங்களையும் ஆலோசிக்கலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை எரித்தமை அவர்களது மத உரிமையை மீறி செயற்பட்டமை கடும் எதிர்ப்பையும் மனவருத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

கொரொனா பயத்தில் இரண்டுபேர் செய்த தவறான முடிவு!


 கொரோனா அச்சம் காரணமாக கம்பஹா - ஜாஎலவில் 56 வயதுடைய ஆணும், களுத்துறை - அகலவத்தையில் 72 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனாவை மறைத்து காதலி வீட்டில் பதுங்கிய நபரால் ஏற்பட்ட சிக்கல்!


கொரோனா தொற்று தெரிந்தும் நண்பியின் வீட்டில் தங்கி இருந்த  இளைஞன் அகப்பட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த  22 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ஆனமடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்துள்ளார்..

தொற்றுக்குள்ளான  இளைஞன் அனமடுவாவின் மருங்கோடாவில்  வசிக்கிறார்  கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பில் தனது பரிசோதனை பயோஃபில்ம் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

 தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிந்தும் அவர்  தனது பெண் நண்பியின் வீட்டில் பதுங்கி இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில்,  இளைஞர்  வீட்டிற்கு செல்வதற்கு முன்பு ஆனமடுவ சதோசாவுக்குச் சென்று காய்கறிகளை வாங்க வேறு கடைக்கும் சென்றிருந்தார்.

அதன்படி, ஆனமடுவா சதோசா  கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆனமடுவ சுகாதார அலுவலர்  நான்கு சதோசா   ஊழியர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்  தங்கியிருந்த வீட்டில் இரண்டு சிறு குழந்தைகளையும், அவர்களின் தாயையும், பாதிக்கப்பட்ட இளைஞரின் நண்பியையும் தனிமைப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 


பாதிக்கப்பட்ட இளைஞன் புத்தளம் டான்கொடுவா மருத்துவமனையின் கோவிட் பிரிவுக்கு அனுப்பியதாக ஆனமடுவ பொது சுகாதார ஆய்வாளர்கள் சிசில் சாமரா ஹேமச்சந்திரா மற்றும் பிரியந்த சரத் குமாரா தெரிவித்தனர்.


lankacnews

Sunday, 8 November 2020

மீண்டும் அசின் கொடுத்த கவர்ச்சி விருந்து; குதூகலத்தில் ரசிகர்கள்!

 ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மலையாள திரை உலகில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து அவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.


முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.



மன்னார் கிராமசேவகரை கொன்றது ஒரு பெண்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!



மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என சொல்லப்பட்ட கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை (3) கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவம் இலங்கை முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதான குற்றவாளியாக கருதப்படும் கிராம சேவகர் ஒருவரின் கணவன் வாக்குமூலத்தில் தெரிவிக்கும் போது எனது மனைவியான கிராம சேவகர் அசம்ரா அவர்கள் விஜி அவர்களிடமிருந்து பத்து லட்ஷம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் அதனை திரும்பி கேட்டதால் கொலை செய்ததாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

பத்து லட்ஷம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்தேன் என பெண் கிராம சேவகரின் கணவன் கூறிய காரணத்தை பொலிஸார் ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இவர் சொல்லும் இந்த காரணம் பின்னணியிலுள்ள வேறொரு காரணத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

தவிர பணம் கேட்டதால் கொலை செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு, அதைவிட கொடுத்த காசை திருப்பி கேட்டு சண்டைபிடிக்கும் பழக்கமும் விஜி அவர்களிற்கு இல்லை, இந்த கருத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ் அவர்களே விஜியின் இறுதி அஞ்சலி உரையில் தெரிவித்திருந்தமை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் விஜி குறித்த பெண் கிராம சேவகருக்கு பணம் கொடுத்ததாக எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார் விஜியின் மனைவி இப்படி ஒவ்வொரு கருத்துக்களும் இந்த காரணம் தொடர்பில் முரண்பாட்டை எடுத்துரைக்கின்றன.

விஜி அவர்களின் கொலைக்கு பின்னணி காரணம் ஒரு பெண் கிராம சேவகரென சொல்லப்படுவதை மக்கள் ஓரளவு ஏற்றுக்கொள்கின்றனர், ஆனால் சொல்லப்படும் காரணம்தான் முரண்பாடான கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என சொல்லப்பட்ட கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை (3) கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவம் இலங்கை முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதான குற்றவாளியாக கருதப்படும் கிராம சேவகர் ஒருவரின் கணவன் வாக்குமூலத்தில் தெரிவிக்கும் போது எனது மனைவியான கிராம சேவகர் அசம்ரா அவர்கள் விஜி அவர்களிடமிருந்து பத்து லட்ஷம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் அதனை திரும்பி கேட்டதால் கொலை செய்ததாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

பத்து லட்ஷம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்தேன் என பெண் கிராம சேவகரின் கணவன் கூறிய காரணத்தை பொலிஸார் ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இவர் சொல்லும் இந்த காரணம் பின்னணியிலுள்ள வேறொரு காரணத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

தவிர பணம் கேட்டதால் கொலை செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு, அதைவிட கொடுத்த காசை திருப்பி கேட்டு சண்டைபிடிக்கும் பழக்கமும் விஜி அவர்களிற்கு இல்லை, இந்த கருத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ் அவர்களே விஜியின் இறுதி அஞ்சலி உரையில் தெரிவித்திருந்தமை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் விஜி குறித்த பெண் கிராம சேவகருக்கு பணம் கொடுத்ததாக எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார் விஜியின் மனைவி இப்படி ஒவ்வொரு கருத்துக்களும் இந்த காரணம் தொடர்பில் முரண்பாட்டை எடுத்துரைக்கின்றன.

விஜி அவர்களின் கொலைக்கு பின்னணி காரணம் ஒரு பெண் கிராம சேவகரென சொல்லப்படுவதை மக்கள் ஓரளவு ஏற்றுக்கொள்கின்றனர், ஆனால் சொல்லப்படும் காரணம்தான் முரண்பாடான கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

பி.ஸி.ஆர் சோதனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!



கொரோனா தொற்றாளர்களை விரைவில் அறிந்துகொள்ள  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rapid Antigen Detection Test (RADT) ரபிட் அன்டிஜென் சோதனையை   எப்போதும் பயன்படுத்த முடியாது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  செயலாளர் வைத்தியர்  ஹரித அலுத்ஜே தெரிவித்துள்ளார்.

இது  வைரஸின் குறைந்த திறன் கொண்ட நபர்களுக்கு தொற்று இருப்பதற்கான (Positive)  முடிவு கிடைக்காது.   COVID-19 வைரஸிற்கான PCR ( Polymerase Chain Reaction) சோதனைக்கு உரியது.  இதற்கு மாற்றாக ரபிட் அன்டிஜென் கண்டறிதல் சோதனை (RADT) எப்போதும் பயன்படுத்த முடியாது.  RADT மற்றும் PCR சோதனைகளைப் பயன்படுத்துவதில் சிலர் குழப்பமடைந்துள்ளதாக அவர் கூறினார். இரண்டு சோதனைகளும் நோயாளியின் உடலில் கொரோனா வைரஸ்  இருப்பதைக் கண்டறிந்துள்ளன, என்றார்.

PCR மற்றும் RADT ஐப் பயன்படுத்தும் போது நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன என வைத்தியர்  ஹரிதா அலுத்ஜே கூறினார்.

"பி.சி.ஆர் சோதனை விலை உயர்ந்தது (ரூ .6,000 முதல் ரூ .8,000 வரை) உள்ளது மற்றும் பரிசோதனை நேரத்தை எடுத்துக்கொள்ளும்,   முடிவை பெறும்போது கூடுதல் உபகரணங்கள் தேவை. மாதிரிகள் இடத்திலேயே தனிப்பட வைக்கமுடியாது,   சோதனைக்கு  மாதிரிகள் ஆய்வகங்களுக்கு  அனுப்பப்பட வேண்டும், ”என்றார்.

ஆனால் குறைந்த செலவில் (குறைந்தது ரூ .1,000) பி.சி.ஆரை விட குறைந்தபட்ச  விலையில். ரபிட் அன்டிஜென்களை  RADT முடிவுகளை வழங்கலாம். 

ரபிட் அன்டிஜென் மூலம் "பரிசோதிக்கப்பட்ட நேர்மறையான (Positive) முடிவைப் பெற நோயாளியின் உடலில் கொரோனா வைரஸ்  அதிக திறனில் இருக்க வேண்டும். வைரஸின் குறைந்த திறன் கொண்ட நபர்களுக்கு சாதகமான முடிவுகள் (Positive) கிடைக்காது, ”என்றார்.

RADT மற்றும் PCR உடன் நடத்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறையுடன் நிபுணர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து, பி.சி.ஆர் சோதனைகளை விட RADT இன் இனங்காணல் குறைவாக உள்ளது, என்றார்.

இருப்பினும், பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் நோயாளிகளின் தனித்தன்மை மாறவில்லை, ஆனால்  RADT இல் எதிர்மறையாக (Negative) இல் சோதிக்கப்பட்டால் பி.சி.ஆர் சோதனை செய்யப்பட வேண்டும், அது அவசியம் என்று அவர் கூறினார்.

ரபிட் கருவிகள் மூலம் சோதனை எவ்வாறு நடைபெறுகிறது?

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்துக்கு உள்ள நபரின் விரலில் ஊசி கொண்டு குத்தி ஒரு சொட்டு இரத்தம் பெறப்பட்டு இந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்துடன்  சில திரவங்கள் சேர்க்கப்படுகின்றன.   சிறிய கருவி போன்ற அமைப்பையே இந்த கொரோனா ரபிட் கருவிகளும் கொண்டுள்ளது.

இரத்தம் செலுத்தப்பட்ட பின் அது பரவி 'C' என்று குறிப்பிட்டுள்ளதில் ஒரு கோட்டை உருவாக்கும். 'C' என்பது கொன்ட்ரோலை குறிக்கும். இந்த கோடு உருவாவது கருவி செயல்படுவதைக் குறிக்கும். அடுத்ததாக 'T' என்ற இடத்தில் கோடு உருவாகிறதா என்று பார்க்கவேண்டும். உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் அளவைப் பொறுத்து அந்த கோடு உருவாகும். கோடு உருவானால் கொரோனா இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. (Posotive)  என்று அர்த்தம். ஆகும்.



தனிமையில் இருந்த தந்தை சாவு! சோகத்தை ஏற்படுத்திய பின்னணி!

தனியாக வசித்துவந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவ வீரர் ஒருவரின் தந்தை என கூறப்பட்டுள்ளது.

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த குறித்த இராணுவ வீரர் தனது தந்தையை தனியாக விட்டுச் சென்றதாகவும் இதனால் நோய்வாய்ப்பட்ட தந்தை தனிமையில் இருந்ததால் சாவடைந்ததாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.



அரசின் உதவித்தொகை பெற வரிசையில் நின்ற பெண் திடீரென்று சுருண்டு விழுந்து மரணம்!

 நீர்கொழும்பு - கதிரானவில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற வரிசையில் நின்ற பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.

குரதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பாடசாலைகள் திறக்கப்படுவது குறித்து வெளியான முக்கிய தகவல்!

 அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளன.

அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன.

முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.

எவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள்


குறிப்பிட்டன.

தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகமூடி அணிகிறீர்களா? அவதானம்... உயிர் ஆபத்தும் உள்ளது!


 

மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.  நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால், கவனம் செலுத்துங்கள்…* 

 *1 = இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.* 

 *2 = மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.* 

 *3 = நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.* 

 *4 = மரணத்திற்கு வழிவகுக்கும்.* 

  *ஆலோசனை*
 --------------
 A = நீங்கள் தனியாக இருக்கும்போது அதை அணிய வேண்டாம்.  முகமூடி அணிந்த ஏ.சி.யுடன் காரில் நிறைய பேரை நான் இன்னும் பார்க்கிறேன்.  அறியாமை அல்லது கல்வியறிவின்மை?

 B = இதை வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.

 C = நெரிசலான இடத்தில் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.

D = அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம்.

 E = எப்போதும் இரண்டு முகமூடிகளை வைத்திருங்கள் ஒவ்வொரு 4-5 மணி நேரத்திலும் மாற்றுங்கள்.

F = முகமூடிகளை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்

 *பத்திரமாக இருக்கவும் !!*

  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம்.  இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வழங்குங்கள்…

  *உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகிறேன்.

you may like this


கமலா ஹாரிஸ் வெற்றியின் பின்னணியில் உள்ள இலங்கைப் பெண் யார் தெரியுமா?

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு பொறுப்பாக செயல்பட்டவர் ரோகினி கொஸோக்லு என்ற இலங்கையை பின்னணியாக கொண்ட பெண்ணாவார்.

அமெரிக்காவில் உப ஜனாதிபதியாக வரும் ஒருவருக்கு, பிரசாரத்துக்கு பொறுப்பான இவ்வாறான உயர் பதவிகளில் இருந்த முதலாவது ஆசிய பெண்ணாக இவர் விளங்குகிறார்

2017 ஆம் ஆண்டு முதல் இவர் கமலா ஹரிஸ் உடன் பணிபுரிந்து வருகிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் 40 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான வரவு – செலவுகளை நிர்வகிக்கும் பிரசார பணிக்கு தலைமை தாங்கினார். இவரின் கீழ் 300 பேர் பிரசாரத்துக்காக பணிபுரிந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது சட்டமன்ற சாதனைகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார், இதில் பெண்கள் பிரச்சார மன்றத்தின் ரைசிங் ஸ்டார் விருது மற்றும் பியூ நற்பணி மன்றம், சிறார் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தேசிய ஊரக சுகாதார சங்கம் போன்ற அமைப்புகளும் அடங்கும்.

ஜனநாயக தேசியக் குழு, தேசிய கல்விச் சங்கம் மற்றும் துணிகர மூலதனம் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றிற்கான காஃப்மேன் மையம் ஆகியவற்றிற்கான சிறப்பு பேச்சாளராகவும் இருந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் உள்ள அரசியல் நிறுவனத்தில் கொசொக்லு ஒரு குடியுரிமை உறுப்பினராக பணியாற்றினார், அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் கேபிடல் ஹில் ஆகியவற்றில் தொழில் வாழ்க்கையை வழிநடத்துவது குறித்த வாராந்திர விவாதத்திற்கு தலைமை தாங்கினார்.

கொசோக்லு பி.ஏ. ஆங்கிலத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மரியாதை மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற விவகாரங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்

அவர் தற்போது தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் வாஷிங்டன் டி.சி. பகுதியில் வசிக்கிறார்.