Saturday, 21 November 2020

யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் பயங்கர ஆபத்து!

 இலங்கையின் வடக்கு மாகாணத்தை தாக்கவல்ல மிகப்பெரிய புயல் சின்னமொன்று நாளை மறுதினம் அளவில் வங்காளவிரிகுடாவில் உருவெடுக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்மதித் தரவுகளை வைத்து கணிக்கும்போது குறித்த புயலின் பாதை வட மாகாணத்தின் முல்லைத்தீவை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் வடக்கு மக்கள் இடம்பெயரும் அளவுக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் பதிவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்ட ‘நிஷா’ புயல் போன்றே இதனுடைய இயல்பும் வழித்தடமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இரண்டு குழந்தைகளை விழுங்கிய குழி; யாழில் நடந்த கொடூரம்!


யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில் அயலர்களால் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) கொண்ட சகோதரர்களான இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தையார் பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல்பகுதியில் அயலர்கள் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்து சேறும் சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Thursday, 19 November 2020

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இளம் பெண்! கதறும் சொந்தங்கள்!!

இலங்கையில் நேற்றைய தினம் (19) கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பு 15 பகுதியைச் சேரந்த 27 வயது பெண் ஒருவர் பலியானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் கண்டறியப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றால் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையே மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார். கொழும்பு – 10 பகுதியில் வசிக்கும் 70 வயது நபரே உயிரிழந்தவராவார். இவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததுடன் இவருக்கு கொவிட் நோய்த்தொற்றுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டமை மரணத்துக்கு காரணமாகியுள்ளது.

இதேவேளை களுத்துறை பகுதியில் இரு மரணங்கள் பதிவாகின. குறித்த பகுதியில் வசிக்கும் 59 வயது பெண் தனது வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொவிட் நோயுடன் உயர் இரத்த அழுத்தமும் காணப்பட்டுள்லமை இறப்புக்கு காரணமாகியுள்ளது.

மற்றுமொருவர் களுத்துறை – ஹத்தோட்டாவைச் சேர்ந்தவர். 36 வயதான இந்த நபர் வீட்டில் இறந்ததாக கூறப்பட்டுள்ளதுடன் கொவிட் நோய்த்தொற்றால் மார்பில் ஏற்பட்ட நோய்த்தொற்று இவருக்கான மரணத்தின் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நான்கு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக மரணமடைந்தோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளது.


சூர்யா படத்தில் அப்துல் கலாமாக நடித்தவர் படம் பார்க்காமலே இறந்த சோகம்!

 சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், ‘உடுமலை கலாம்’ எனவும் அழைக்கப்பட்டவர்.

தாம் நடித்த படம் திரைக்கு வரும் முன்பாகவே மரணம் அவரைத் தழுவிக் கொண்டதால், அவருக்கு மிகவும் பிடித்தமான அப்துல் கலாம் தோற்றத்தில் தம்மை திரையில் பார்க்கும் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக கூறுகின்றனர்.

அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட ஷேக் மைதீன், கலாமின் அறிவுரைகளை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக தெரிவிக்கின்றனர் அவரது நண்பர்கள்.

“ஷேக் மைதீனை எனக்கு 13 வருடங்களாக தெரியும். ஏழ்மையான குடும்ப சூழலில் படிப்பறிவில்லாமல் வளர்ந்தவர் அவர். வாழ்வாதாரத்திற்காக பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போதிலிருந்தே அப்துல் கலாம் மீது பற்றுக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அப்துல் கலாமின் சாயலில் இருப்பார். 10 வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரைப் போலவே முடி அமைப்பை மாற்றிக் கொண்டு வந்து நின்றார். ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. அன்று முதல் அப்துல் கலாமைப் போலவே தனது தோற்றத்தை அமைத்துக் கொள்வதோடு, அவரது அறிவுறைகளையும் மாணவர்களிடம் பரப்பத் துவங்கினார்” என்கிறார் ஷேக் மைதீனின் நண்பர் லட்சுமணன்.

உடுமலைப்பேட்டையில் 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட தன்னார்வ குழுவில், ஷேக் மைதீனின் களப்பணி முக்கியமானது என கூறுகிறார் லட்சுமணன்.

“பசுமைப் புரட்சி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நற்பணி இயக்கம் என்ற தன்னார்வ குழுவை உருவாக்கி அதில் ஷேக் மைதீனை கெளரவத் தலைவராக நியமித்தோம். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார். அவரைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் வரும். அப்துல் கலாமைப் போலவே மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஷேக் மைதீனும் விருப்பப்படுவார். ‘படிப்பறிவு இல்லாததால் தான் நான் பெயிண்டிங் வேலைக்கு சென்றேன். அதனால், நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். கலாம் ஐயாவைப் போல் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்’ என எல்லா மேடைகளிலும் பேசுவார். ‘ஷேக் மைதீன் எனும் உடுமலை கலாம்’ என்று ஆரம்பத்தில் அவரை நாங்கள் அழைத்து வந்தோம். பின்னர், ‘உடுமலை கலாம்’ என்பதே அவரின் அடையாளமாக மாறிப்போனது” என்கிறார் லட்சுமணன்.

அப்துல் கலாமின் உருவ தோற்றம் இருப்பதால் போகும் இடமெல்லாம் ஷேக் மைதீனோடு செல்ஃபி எடுக்க மக்கள் கூட்டம் சேர்ந்துவிடும் என கூறுகிறார் அவரோடு சமூகப் பணிகளை மேற்கொண்ட அபு இக்பால்.

“பெரம்பலூரில் ஓர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஷேக் மைதீனுக்கு அழைப்பு வந்தது. நானும், அவரும் திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினோம். திடீரென அவரைச் சுற்றி பொதுமக்கள் கூடத் தொடங்கினர். பலரும் அவரோடு செல்ஃபி எடுக்க குவிந்துவிட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமானது. இருந்தும், அவர் அனைவரோடும் நின்று படம் எடுத்துக் கொண்டார். இதனால், பொது இடங்களுக்கு செல்கையில் தலைமுடியை மறைத்து துணியைக் கட்டிக்கொள்வார். பல சிரமங்கள் இருந்தாலும் மாணவர்களை சந்தித்து உரையாற்றுவதற்கு உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார். எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர் ஷேக் மைதீன்” என்கிறார் இவர்.

திருப்பூர், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வ குழுக்களோடு இணைந்து ஷேக் மைதீன் பணியாற்றியுள்ளார்.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் இவர் நடித்து பிரபலமடைந்துள்ளார். அதன் மூலமாகவே சூரரைப்போற்று திரைப்படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

“5 வருடங்களுக்கு முன்னர் அப்துல் கலாம் குறித்த ஆவணப்படத்திற்காக ஷேக் மைதீனை முதல்முறையாக சந்தித்து பேசினேன். கலாமின் அசல் உருவ தோற்றத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அந்த ஆவணப்படத்தை எடுக்க முடியவில்லை. அதற்கு பின்னர், கும்பகோனம் பள்ளி தீவிபத்து குறித்த குறும்படத்தில் அவரை நடிக்க வைத்தோம். அது அவருக்கும் எங்கள் குழுவிற்கும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து ஏராளமான குறும்படங்களில் அவர் நடித்தார். அதன் மூலம் பிரபலமானவர், சூரரைப்போற்று படத்திலும் அப்துல் கலாம் கதாப்பாத்திரத்திலேயே நடித்தார்” என்கிறார் சரவணன்.

“சில மாதங்களுக்கு முன் அவரை நான் நேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். அதில் மிகவும் உற்சாகமாக பல நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கையில், உடுமலைப்பேட்டை வந்துள்ளார். அப்துல் கலாம் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஷேக் மைதீனும் சென்றுள்ளார். அப்போது இவர் தான் அப்துல் கலாம் என நினைத்துக்கொண்ட போலீசார் பாதுகாப்பில்லாமல் ஜனாதிபதி நடந்து வருவதாக நினைத்துக் கொண்டு ஷேக் மைதீனை காரில் ஏற்றியுள்ளனர். பின்னர், தான் அப்துல்கலாம் இல்லை எனக் கூறியதும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்துகொண்ட அப்துல்கலாம், ஷேக் மைதீனை நேரில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ‘கிராமங்களுக்கு என்னால் வரமுடியவில்லை. எனவே, என்னைப் போலவே இருக்கும் நீ, கிராமங்களுக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் உரையாடு’ என வலியுறுத்தியதாக ஷேக் மைதீன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்” என அவருடனான நினைவுகளை கூர்கிறார் இயக்குனர் சரவணன்.

சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்த பின்னர், தன்னைப் பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என தனது குடும்பத்தினரிடம் ஷேக் மைதீன் தெரிவித்ததாக கூறுகிறார் அவரது மூத்த மகன் ஜெயிலானி.

“முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த பின்பு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கலாமின் வீட்டிற்கும் சென்று குடும்பத்தாரை எனது தந்தை சந்தித்துள்ளார். கலாம் ஐயாவைப் போன்ற உருவத் தோற்றம் இருந்ததால் அவரின் குடும்பத்தினரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இன்றும் அந்த தொடர்பு நீடிக்கிறது. பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக உடல் நலத்தை கவனிக்காமல் ஊரெல்லாம் சுற்றி வந்தார். இதனால், குடும்பத்தினர் அனைவரும் அவரிடம் கடிந்து கொள்வோம்.”

“சூரரைப்போற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்து வந்தது முதல் படம் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தார். இப்படத்தின் மூலம் தன்னை பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என அவர் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், படம் வெளியாகும் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப்போனது.”

“கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி, தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார். படத்தை பார்க்காமலே இறந்துவிட்டார் என்ற சங்கடத்தால் நான் அந்த படத்தை பார்க்கவில்லை. இம்மாதம் படம் வெளியானதும் பலர் என்னை அழைத்து பேசி பாராட்டுத் தெரிவித்தனர். சமீபத்தில் தான் குடும்பத்தோடு சென்று சூரரைப்போற்று படம் பார்த்தோம். அவர் வாழ்ந்த அப்துல் கலாம் கதாப்பரத்திலேயே நடித்து புகழ் பெற்றுவிட்டார். அவர் எதிர்பார்த்த பாராட்டுக்கள் கிடைக்கும்போது அதனை பெற்றுக்கொள்ள அவர் இல்லையே என்ற வருத்தம் தான் எங்களுக்கு” என தெரிவிக்கிறார் ஷேக் மைதீனின் மூத்த மகன் ஜெயிலானி.

சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமின் உருவ ஒற்றுமை கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளோடும் பயணித்த ‘உடுமலை கலாம்’ என்கின்ற ஷேக் மைதீன் அப்துல்கலாமாகவே திரையில் தோன்றி வரலாறாக மாறிவிட்டார் என பெருமை கொள்கின்றனர் ஷேக்மைதீனின் நண்பர்கள்.


அஜித்குமாருக்கு நேர்ந்த கதி? படப்பிடிப்பில் கடும் சண்டை; சோகத்தில் ரசிகர்கள்!

 சமீபத்திய சினிமாப் பேச்சுக்களில் அதிகம் அடிபடும் வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாக படக்குழுவிலுள்ளோர் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங்  நடைபெற்று வந்த நிலையில்,10 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் வைத்து இந்த விபத்து இடம்பெற்ற்றது.

படமாக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சி ஒன்றில் வில்லர்களுடன் பாய்ந்து பாய்ந்து சண்டை பிடிக்கும்போதே இந்த விபத்து நிகழ்ந்து அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து  படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகி விட்டது எனவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நடிகர் அஜித்குமாருக்கு ஏதும் பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.


Wednesday, 18 November 2020

20 வயதுக்குள் இத்தனை மனைவிகளா? நான்காவதுக்கும் குடும்பத்தோட ரெடி!

 மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 20 வயது இளைஞன் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வரும் செய்தியொன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் சியல்கொட் பகுதியைச் சேர்ந்த அட்னான் என்ற இளைஞனே ஏற்கனவே மூவரைத் திருமணம் செய்துவிட்டு தனக்கு நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி, அவருடைய 3 மனைவிகளும் கணவருக்காக இணைந்து பெண் தேடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தனது 16 வயதில் முதல் திருமணம் செய்ததுடன் அத்தோடு நின்றுவிடாமல் சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த ஒரு வருடத்துக்குப் முன்னர் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகிய மூன்று மனைவிகளின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய விரும்புவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்று மனைவியரையும் கட்டிக்காப்பாத்த ஒரு மாதம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், தனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மூன்று மனைவிகளும் தன்னுடன் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பதே என சிரிப்புடன் கூறியுள்ல அவர், தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து தன்னை மாறி மாறி கவனித்து வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.


Tuesday, 17 November 2020

இலங்கையில் இன்று இதனால்தான் ஐவர் இறந்தார்களாம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இவர்களுக்கு கொரோனாவுடன் வேறு நோயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் வெலிகந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.

கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது. இது கொரோனா நோயுடன் அதிகரித்துள்ளது.

கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா நோயுடன் நிமோனியா இருந்துள்ளது.

தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் வீட்டில் இறந்தார். இவருக்கு கொரோனா நோயுடன் நீரிழிவு நோயும் இருந்துள்ளது. இதுவே மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டள்ளது.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

நெஞ்சில் சளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புத மூலிகை!

 1) இஞ்சி :

10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.
2) திரிகடுகம் கசாயம் :
30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
3) எலுமிச்சை :
ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4) தேங்காய் எண்ணெய் :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று.
5) துளசி :
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.
6) ஆடாதொடை :
ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.
7) கடுக்காய் :
மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும்.

கொரோனாவால் சிலர் மரணம்! இன்றுமட்டும் இவ்வளவுபேரா?

 இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும்
398 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக தொற்றுக்குளானோர் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரித்தது.

மேலும், இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 404ஆக காணப்படுவதுடன் நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210 ஆக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ரிசாத்துக்கு கொரோனா ஆபத்து? வெளியான தகவல்!

 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் சார்பில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு தெரியப்படுத்தினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தனது சேவை பெறுநரான ரிஷாத் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள  9 ஆவது கூண்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றார்.

குறித்த தொற்றுக்குள்ளானவர், கந்தக்காடு கொவிட் 19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த  ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும்,   அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொன்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக் குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

எவ்வாறாயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாத் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.