Tuesday, 21 August 2018

கொபி அனானின் சேவை மகத்தானது; பிரதமர் ரணில்!


ஐக்கிய நாடுகள் சபைக்கு கொபி அனான் ஆற்றிய சேவைகள் மகத்தானவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக அவர் தமது வாழ்வை அர்ப்பணித்து நியாயமான நீதியை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய சேவையை ஆற்றியவராக கொபி அனானை குறிப்பிட முடியும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொபி அனானின் மறைவு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் அனுதாப செய்தி ஐக்கிய நாடுகள் செயலாளர நாயகம் அன்டோனியோ குத்ரேஸ்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மக்களும் அரசாங்கமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிராந்திய, சமூக பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக செயற்படுவது தமது நோக்கமாகும் என்றும் தமக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment