மட்டக்களப்பு பொதுச் சந்தையில் வீசப்படும் கழிவுகளிலிருந்து உயிர்வாயு தயாரிப்பதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இந்த உயிர்வாயு அமைக்கும் நிலையத்தினை அமைக்கவுள்ளன.
பொதுவாக மட்டக்களப்பு பொதுச் சந்தையில் அன்றாடம் ஏராளமான கழிவுப் பொருட்கள் தேங்குவதாகவும் இவை முறையான பராமரிப்பின்மையால் பெரும் சுகாதார்ச் சீர்கேடுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வாறான உயிர்வாயு தயாரிப்பதற்கான நிறுவனம் அமைத்தல் பிரதேச அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment