இலங்கையில் வென்னப்புவ என்ற பகுதியைச் சேர்ந்த மெரில் சாந்தி என்ற 52 வயதான குடும்பஸ்தரே இந்த பயங்கரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்பட்டுள்ளதுடன் இத்தாலியின் நபொலி விதியில் படு காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனாலும் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் சாவடைந்தார்.
கடந்த 25 வருடங்களாக இத்தாலியில் மனைவி பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்த நிலையில் இவ்வாறு சாவடைந்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் விபத்துக் காரணமாக சாவடைந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொன்றார்களா என பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
இதேவேளை அந்தப் பிரதேசத்தில் நாசகாரக் கும்பல்கள் அதிகம் உலாவுவதாகவும் அவர்களால்தான் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment