அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செப்டெம்பர் முதல் வாரத்தில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியான கடுவலை பிரதேசத்தின் நவகமுவ விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உறையாற்றும் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
“பெற்றோர் தமது பிள்ளைகளை வளர்ப்பது போலவேயே அரசியல் தலைவர்கள் நாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு நாட்டை வளர்த்தெடுக்க முடியாவிடின் நாட்டிடை வளர்த்ததெடுக்கக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைத்துச் செல்ல வேண்டும்.
2005ஆம் ஆண்டு நாட்டைப் பெற்ற முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ச நாட்டை குறிப்பிட்டதைப் போல யுத்தத்தையும் நிறைவுபடுத்தி மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்க ஏற்பாடு செய்தார்.
இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு நாட்டை ஆட்சிக்கு பெற்றது முதலே சுதந்திரமாக சுவாசிப்பதாக தெரிவிக்கின்றனர். அன்று யுத்தம் முடிவடைந்த போது நாட்டு மக்கள் சுதந்திரமாக மூச்செடுக்கவில்லையா? பாதாள உலகக் கோஷ்டியினர் இல்லாமலாக்கப்பட்ட போது சுதந்திரமாக மூச்செடுக்கவில்லையா? அவ்வாறு சுதந்திரமாக மூச்செடுத்த காலத்தையே ஜனவரி 8ஆம் திகதி இல்லாமல் செய்தனர்.
ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களில் மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியை மேற்கொண்டனர். அதனை ஈடு செய்வதற்கு அன்று தேர்தல் பிரசாரமாக “மஹிந்த ஆட்சியில் வரி வீதங்கள் அதிகமாக உள்ளது” என தெரிவித்து வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை அதிகரித்தனர்.
இந்த அரசாங்கத்தினர் தம்மை ஆட்சியில் அமர உதவி செய்தவர்களுக்கே பதவிகளை வழங்கியுள்ளது. இன்று அமைச்சர்களாக, தூதுவர்களாக மற்றும் எதிர்கட்சியினராக பதவி வழங்கியுள்ளனர்.
70 எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் உரிமைகளை சிதைத்த ஓர் நாடாளுமன்றமெனின் அது சிறிலங்காவின் நாடாளுமன்றமாகும். நடாளுமன்றில் இனிவரும் காலங்களில் அவரை மரியாதைக்குரிய சபாநாயகர் என அழைக்கப்போவதில்லை. சபாநாயகர் கரூ ஜயசூரிய அவர்மீது நாம் கொண்டிருந்த மரியாதையை இல்லாதொழித்துக் கொண்டார்.
மைத்திரி தேர்தலில் யானைக்கு கைகொடுத்தார் யானை மைத்திரிக்கு கை கொடுத்தது அனால் இருவருக்கும் அரசியல் பயணத்தில் மயானத்திற்கு செல்லவே நேரிடும்.
இந்நிலையில் சிறிலங்க நாட்டின் மீது ஆதரவுள்ள அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த தரித்திரமான அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செப்டெம்பர் முதல் வாரத்தில் கொழும்பில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” என்றார்.
“பெற்றோர் தமது பிள்ளைகளை வளர்ப்பது போலவேயே அரசியல் தலைவர்கள் நாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு நாட்டை வளர்த்தெடுக்க முடியாவிடின் நாட்டிடை வளர்த்ததெடுக்கக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைத்துச் செல்ல வேண்டும்.
2005ஆம் ஆண்டு நாட்டைப் பெற்ற முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ச நாட்டை குறிப்பிட்டதைப் போல யுத்தத்தையும் நிறைவுபடுத்தி மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்க ஏற்பாடு செய்தார்.
இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு நாட்டை ஆட்சிக்கு பெற்றது முதலே சுதந்திரமாக சுவாசிப்பதாக தெரிவிக்கின்றனர். அன்று யுத்தம் முடிவடைந்த போது நாட்டு மக்கள் சுதந்திரமாக மூச்செடுக்கவில்லையா? பாதாள உலகக் கோஷ்டியினர் இல்லாமலாக்கப்பட்ட போது சுதந்திரமாக மூச்செடுக்கவில்லையா? அவ்வாறு சுதந்திரமாக மூச்செடுத்த காலத்தையே ஜனவரி 8ஆம் திகதி இல்லாமல் செய்தனர்.
ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களில் மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியை மேற்கொண்டனர். அதனை ஈடு செய்வதற்கு அன்று தேர்தல் பிரசாரமாக “மஹிந்த ஆட்சியில் வரி வீதங்கள் அதிகமாக உள்ளது” என தெரிவித்து வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை அதிகரித்தனர்.
இந்த அரசாங்கத்தினர் தம்மை ஆட்சியில் அமர உதவி செய்தவர்களுக்கே பதவிகளை வழங்கியுள்ளது. இன்று அமைச்சர்களாக, தூதுவர்களாக மற்றும் எதிர்கட்சியினராக பதவி வழங்கியுள்ளனர்.
70 எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் உரிமைகளை சிதைத்த ஓர் நாடாளுமன்றமெனின் அது சிறிலங்காவின் நாடாளுமன்றமாகும். நடாளுமன்றில் இனிவரும் காலங்களில் அவரை மரியாதைக்குரிய சபாநாயகர் என அழைக்கப்போவதில்லை. சபாநாயகர் கரூ ஜயசூரிய அவர்மீது நாம் கொண்டிருந்த மரியாதையை இல்லாதொழித்துக் கொண்டார்.
மைத்திரி தேர்தலில் யானைக்கு கைகொடுத்தார் யானை மைத்திரிக்கு கை கொடுத்தது அனால் இருவருக்கும் அரசியல் பயணத்தில் மயானத்திற்கு செல்லவே நேரிடும்.
இந்நிலையில் சிறிலங்க நாட்டின் மீது ஆதரவுள்ள அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த தரித்திரமான அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செப்டெம்பர் முதல் வாரத்தில் கொழும்பில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” என்றார்.
No comments:
Post a Comment